காணாமல் போனதாகக் கூறப்படும் இலங்கை அகதிகள் தொடர்பில் இந்திய ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்
கடந்த செப்டம்பர் மாதத்தில் தமிழகத்தின் அகதிகள் முகாம்களிலிருந்தும் ஏனைய தனியார் குடியிருப்புகளிலிருந்தும் காணாமல் போனதாகக்கூறப்படும் இலங்கைத் தமிழர்கள் 65 பேர் தொடர்பில் தமிழகக் காவல்துறைக்கும் இன்னும் தகவல்கள் கிடைக்கவில்லை.
இந்த செய்தியை இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் மாலைத்தீவுக்கு அருகில் உள்ள டீகோ காா்சீயா( Diego Garcia) பகுதியில் ஏதிலிகள் சிலர் கண்டறியப்பட்டதாகத் தகவல்கள் வெளியானபோதும் அது தொடர்பில் தமிழக காவல்துறையினருக்குச் சுயாதீனமாகத் தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை.
இதேவேளை இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இலங்கை அகதிகள் கடனாவுக்கு செல்லும் நோக்கில் கேரளாவின் கரையிலிருந்து புறப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த ஏதிலிகள், தென்னாப்பிரிக்காவை அடைய இந்தியப் பெருங்கடலைப் படகு ஒன்றின் மூலம் கடந்து சென்றதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
அங்கிருந்து அவர்கள் கனடாவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தனர். எனினும் அவர்கள் தொடர்பில் உாிய தகவல்கள் கிடைக்காமையை அடுத்து தமிழக காவல்துறையினர், சர்வதேச காவல்துறையான இன்டா்போலிடம் முறையிட்டுள்ளனர்.
இதேவேளை தமிழகத்தில் உள்ள 108 ஏதிலி முகாம்களில் சுமார் 65ஆயிரம் ஏதிலிகள்
தங்கியுள்ளதாகத் தமிழக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.





படம் இல்லை ரூ. 100 கோடிக்கு மேலான செலவில் அட்லீ இயக்கும் விளம்பரம்... பிரம்மாண்டத்தின் உச்சம் Cineulagam

ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri
