யாழ்ப்பாணம் செல்கின்றார் இந்திய வெளியுறவு செயலாளர்!
இலங்கைக்கான உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளும், இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா (Shri Harsh Vardhan Shringla) யாழ்ப்பாணத்திற்கும் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் வெளியுறவு செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயின் (Jayanath Colombage) அழைப்பின் பேரில் நாளை முதல் எதிர்வரும் 5ம் திகதி வரை இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்கிறார்.
இந்த பயணம் நீண்டகால உறவுகளை ஒருங்கிணைப்பதற்கும், இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு கூட்டுறவுகளை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வெளியுறவு செயலாளருடனான இருதரப்பு சந்திப்பை அடுத்து, இந்திய வெளியுறவு செயலாளர் ஷ்ரிங்லா, இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
இந்திய வெளிவிவகார செயலாளர், இலங்கையில் தங்கியிருக்கும் போது கண்டி, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வெளியுறவு செயலாளராக பதவியேற்ற பின்னர், அவர் இலங்கை விஜயம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 19 மணி நேரம் முன்

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri
