ஏலத்தில் விடப்பட்ட இந்திய கடற்தொழில் படகுகள்
இலங்கைக் (Sri Lanka) கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்ட நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட இந்திய கடற்தொழில் படகுகள் மற்றும் உபகரணங்கள் என்பன பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்தில் நேற்று (08) காலை பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
வல்வெட்டித்துறை கடற்பரப்பில் வைத்து கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் திகதி 4 இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறைப் பொலிஸாரால் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தது.
கடற்தொழில் உபகரணங்கள் அரசுடமை
இந்நிலையில் கடற்தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டிருந்ததுடன் கடற்தொழில் படகுகள் மற்றும் கடற்தொழில் உபகரணங்கள் அரசுடமையாக்கப்பட்டிருந்தன.
இவ்வாறு அரசுடமையாக்கப்பட்ட இரண்டு லம்பாடி ரக கடற்தொழில் படகுகள் 2 இலட்சத்து 12 ஆயிரம் ரூபாவுக்கும், கடற்தொழில் வலைகள் ஒரு இலட்சத்து 81 ஆயிரம் ரூபாவுக்கும், இரண்டு வெளியிணைப்பு இயந்திரங்கள் 64 ஆயிரம் ரூபாவுக்கும், குளிரூட்டல் பெட்டி 55 ஆயிரம் ரூபாவுக்கும், இரண்டு ஜி.பி.எஸ். கருவிகள் 46 ஆயிரத்து 100 ரூபாவுக்கும், நங்கூரம் 8 ஆயிரம் ரூபாவுக்கும் என 5 இலட்சத்து 66 ஆயிரத்து 100 ரூபாவுக்கு ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![Gallery](https://cdn.ibcstack.com/article/041c2372-88c3-4263-b42e-a5d163c19ada/25-67a82b999f438.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/cbecb121-2d82-468c-89f3-8f9a4ee434b0/25-67a82b9a2e123.webp)
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)