இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் விளக்கமறியலில்
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து படகு ஒன்றில் கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 07 இராமேஸ்வர கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று (01.07.2025) மாலை உத்தரவிட்டுள்ளார்.
இராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து நேற்று (30) கடற்றொழில் ஈடுபட சென்ற ஏழு கடற்றொழிலாளர்கள் நேற்று திங்கள் இரவு எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில் இலங்கை கடல் பகுதியில் வைத்து கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.
நீதிமன்றில் முன்னிலை
தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் குறித்த கடற்றொழிலாளர்களை இன்று (1) மதியம் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் இன்று (01.07.2025) மாலை குறித்த கடற்றொழிலாளர்களை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தியுள்ளனர்.
இதன்போது, விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 07 கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
