தமிழக முதல்வரின் முயற்சியால் இந்திய கடற்தொழிலாளர்கள் விடுவிப்பு
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் (M K Stalin) மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக இலங்கைச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 20 இந்திய கடற்தொழிலாளர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
ஓராண்டுக்கு முன் இலங்கை கடற்படையினரால் சுமார் 20 தமிழக கடற்தொழிலாளர்கள் எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.
விடுவிக்க இராஜதந்திர முயற்சிகள்
பின்னர் அவர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டிருந்தனர்.
அவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்கள் தமிழகத்தின் புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியிருந்தது.

கடந்த டிசம்பர் 24ஆம் திகதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கை கடற்படையின் பிடியில் உள்ள 20 இந்திய கடற்தொழிலாளர்களையும் அவர்களது இயந்திரப் படகுகளுடன் உடனடியாக விடுவிக்க இராஜதந்திர முயற்சிகளை மேற்கொள்ளுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அக்கடிதத்தில், அடிக்கடி மேற்கொள்ளப்படும் கைதுகள் மற்றும் தாக்குதல்கள், பாரம்பரிய கடற்பரப்பில் கடற்தொழிலில் ஈடுபடுவதை மட்டுமே நம்பி வாழும் தமிழக கடற்தொழிலாளர்களின் வாழ்க்கை மிகவும் ஆபத்தினை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
தற்காலிக குடியுரிமை சான்றிதழ்
இந்நிலையில் குறித்த கடிதத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ராஜதந்திர முயற்சிகளின் பலனாக, இந்திய-இலங்கை அரசாங்க அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் 20 கடற்தொழிலாளர்களும் விடுவிக்கப்பட்ட நிலையில், இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதையடுத்து அவர்களுக்கு தற்காலிக குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டு, விமானம் மூலமாக கொழும்பில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடற்தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 20 இந்திய கடற்தொழிலாளர்களும் விமானம் மூலம் சென்னை வந்தடைந்ததாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 2 மணி நேரம் முன்
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
பிரிட்டிஷ் ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: பின்னணியில் ரஷ்யாவின் சதியா? பிரித்தானியா சந்தேகம் News Lankasri
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri