வடக்கில் மக்கள் போராட்டம் வெடிக்கும்: ரவிகரன் எம்.பி எச்சரிக்கை
வடபகுதி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சுரண்டும் இந்திய இழுவைப்படகுகளை கட்டுப்படுத்தவில்லை எனில் மக்கள் போராட்டம் வெடிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய(05.03.2025) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“இந்திய கடல் எல்லைரைத் தாண்டி இலங்கைக் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் நுழைவதை இந்திய அரசும், இந்திய கடற்படையும் தடுக்கவேண்டும்.
கடற்றொழில் அமைச்சரின் தலையீடு
அதேபோல், இலங்கைக் கடற்படையினரும் இந்த இந்திய இழுவைப்படகுகள் அத்துமீறி எமது கடற்பரப்பிற்குள் நுழையும் விடயத்தில் பொறுப்பற்று செயற்படுகின்றனர்.
இலங்கைக் கடற்பரப்பினைப் பாதுகாக்க வேண்டியது இலங்கைக் கடற்படையின் பொறுப்பாகும். ஆகவே, இந்த விடயத்தில் கடற்றொழில் அமைச்சரே நீங்கள் தலையீடு செய்யுங்கள்.
கடற்றொழிலாளர்களைக் காப்பாற்றுங்கள். இல்லையேல் வடக்கில் முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி நான்கு மாவட்டங்களிலும் கடற்றொழிலாளர்கள் வீதியில் இறங்கிப்போராடுவார்கள். அந்த நிலையை ஏற்படுத்தாதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

லண்டனில் இந்திய வெளியுறவு அமைச்சர் மீது தாக்குதல் நடத்த முயற்சி: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சி News Lankasri
