இந்திய கடற்தொழிலாளர்கள் ஏழு பேர் இலங்கை கடற்படையினரால் கைது
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை விசைப்படகில் கடற்தொழிலாளர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
கைதானவர்கள்
காங்கேசன்துறை வட மேற்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகிலிருந்த 7 கடற்தொழிலாளர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைதான கடற்தொழிலாளர்கள் படகுடன் கங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படை கூறும் விடயம்
முதற்கட்ட விசாரணைக்கு பின் அவர்களை மயிலட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
