பாதுகாப்பு செயலாளர் பதவி! மனம் திறந்தார் பொன்சேகா
தனக்கு பாதுகாப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டாலும், அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
எசல பௌர்ணமி போயாவை முன்னிட்டு களனியில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
பாதாள உலகத்தின் செயல்பாடு
"இந்த அரசாங்கத்தில் பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் சில வேலைகளைச் செய்கிறார். ஆனால் இதுவரை பாதாள உலகத்தின் செயல்பாடுகளைத் தடுக்க எதுவும் செய்யப்படவில்லை.
இப்போதெல்லாம், கொலைகள் முக்கியமாக போதைப்பொருள் கடத்தல் மூலம் நடக்கின்றன. இதன்படி போதைப்பொருள் நம் சமூகத்திற்கு அவமானமாகிவிட்டது.
மேலும், எனக்கு பாதுகாப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டாலும், அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அத்தோடு நடவடிக்கைகளை செயற்படுத்த அங்கு சரியான செயலாளர்கள் இல்லை.
அமைச்சர்களுக்கு உள்ள பொறுப்பு
அமைச்சகங்களில் தணிக்கை அதிகாரிகளாக செயலாளர்கள் உள்ளனர். இருப்பினும், நான் ஒரு ஃபீல்ட் மார்ஷல் என்பதால், அரசாங்கத்தின் அமைப்பின்படி, அமைச்சர்களுக்கு உள்ள பொறுப்பு எனக்கும் உள்ளது. முதலில், "திருடர்கள் பிடிக்கப்பட வேண்டும்.
அவ்வவாறு இல்லாவிட்டால் எதனையும் செய்ய முடியாது. என்று கூறியுள்ளார்.
