இந்திய நிதி அமைச்சரை சந்திக்க தயாராகும் கடற்றொழிலாளர்கள்
யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ள நிதி அமைச்சரை சந்தித்து கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக யாழ். கிராமிய கடற்தொழில் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (01.11.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இந்திய நிதி அமைச்சரை சந்தித்து கலந்துரையாடுவோம். அத்துடன் நிதி சேகரித்து தமிழகம் சென்றும் கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளோம்.
சட்ட திருத்த முன்வரைவு
இந்திய மத்திய அமைச்சர் யாழ்ப்பாணம் வராது விட்டால் கொழும்பு சென்று சந்திப்பதற்கும் தீர்மானித்துள்ளோம்.
இதற்கமைய, புதிதாக கொண்டுவரப்படவுள்ள கடற்றொழில் சட்ட திருத்த முன்வரைவு தொடர்பான கருத்துக்கள் கோரப்படுகின்றன.

நியாயமான விடயங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அமைச்சரவைக்கு சமர்பிக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.
மேலும், கடற்தொழில் அமைச்சருடனும் இச் சட்டம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 23 மணி நேரம் முன்
விபத்து ஏற்பட்டு ரத்த காயத்துடன் வலியில் துடிக்கும் தமிழ், பதறிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam