இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளவுள்ள இந்திய அணி : வெளியாகவுள்ள அணிகளின் விபரங்கள்
இலங்கையில் இந்த மாத இறுதியில் சுற்றுலாவை மேற்கொள்ளவுள்ள இந்திய ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது அணிகளின் விபரங்கள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் இந்த இரண்டு அணிகளுக்கும் தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா தனிப்பட்ட காரணங்களுக்காக, இந்திய அணியில் இடம்பெறவில்லை.
இலங்கை சுற்றுலாவில் ஓய்வு
எனவே, சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் விளையாடவேண்டும் என்று புதிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆர்வம் கொண்டுள்ளார்.

முன்னதாக குறித்த மூவருக்கும் இலங்கை சுற்றுலாவில் ஓய்வு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே பாண்டியாவின் பயணத்தவிர்ப்பை அடுத்து, புதிய யோசனையை கம்பீர் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதேவேளை, 20க்கு 20 போட்டிகளில் இருந்து ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் ஓய்வுப் பெற்றுள்ளமையால், ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக சூரியக்குமார் யாதவ் இலங்கைக்கு எதிரான 20க்கு 20 போட்டிகளுக்கு தலைமையேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam