ஆட்டநாயகன் பரிசை நன்கொடையாக வழங்கிய மஹீஸ் தீக்ஷன
லங்கா பிரிமியர் லீக் போட்டியில் வென்ற பரிசுத்தொகையை புற்று நோய் நிதியத்திற்கு இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் மஹீஸ் தீக்ஷன நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இலங்கையில் தற்பொழுது நடைபெற்று வரும் லங்கா பிரிமியர் லீக் போட்டித்தொடரின் போட்டியொன்றில் தீக்ஷன ஆட்ட நாயகனாக தெரிவாகியிருந்தார்.
கால் மார்வல் அணியின் சார்பில் விளையாடி வரும் தீக்ஷன, தம்புள்ள அணிக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

மார்பக புற்று நோய் குறித்து விழிப்புணர்வு
இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவானமைக்காக தீக்ஷனவிற்கு 1500 அமெரிக்க டொலர்கள் பணப்பரிசாக வழங்கப்பட்டது.
இந்த பரிசுத் தொகையை தாம் இந்திரா புற்று நோய் நிதியத்திற்கு வழங்குவதாக தீக்ஷன அறிவித்துள்ளார்.
மார்பக புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நோய் சிகிச்சைக்காகவும் இந்த நிதியம் நிதி திரட்டி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam