தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் மீண்டும் வெற்றி பெற்ற இந்தியா
சுற்றுலா இ;ந்திய (India) அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் (South Africa) இடையில் நேற்று (13) நடைபெற்ற மூன்றாவது 20க்கு 20 கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 11 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இதன்படி போட்டித்தொடரில் இந்திய அணி 2க்கு 1 என்ற ரீதியில் முன்னிலை வகிக்கிறது.
தென்னாபிரிக்க செஞ்சூரியனில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 219 ஓட்டங்களை பெற்றது.
7 விக்கட்டுக்கள் இழப்பு
இதில் அபிஷேக் சர்மா 25 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றார். திலக் வர்மா 56 பந்துகளில் 107 ஓட்டங்களை பெற்றார்.

இதனையடுத்து துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி, 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கட்டுக்களை இழந்து 208 ஓட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் தோல்வியடைந்தது.
இதேவேளை இரண்டு அணிகளுக்கும் இடையிலான நான்காவதும் இறுதியுமான 20க்கு20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
தலைநகரம் பாதுகாப்பாக இல்லை! லண்டனுக்கு இராணுவத்தை அனுப்ப வேண்டிய நேரமிது - நாதிம் ஜஹாவி News Lankasri