எதிர்ப்பார்ப்புக்கு கிடைத்த வெற்றி! பாகிஸ்தானை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு நுழைந்தது இந்தியா
புதிய இணைப்பு
176 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது.
ஹர்திக் பாண்ட்யா முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரின் 4ஆவது பந்தில் சஹிப்சதா ஃபர்ஹான் ஆட்டமிழந்தார்.
இந்த ஓவரை ஹர்திக் பாண்ட்யா மெய்டன் ஓவராக வீசினார் 2-வது ஓவரை பும்ரா வீசினார்.
இந்த ஓவரின் முதல் பந்தை ஆயுப் சிக்சருக்கு தூக்கினார். 2-வது பந்தில் ஆட்டமிழந்தார்.

5-வது பந்தில் பவுண்டரி அடித்த சல்மான் ஆகா, கடைசி பந்தில் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் பாகிஸ்தான் 13 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்த வந்த பாபர் அசாம் 5 ஓட்டங்களில் அக்சர் படேல் பந்தில் வெளியேறினார். விக்கெட் கீப்பர் உஸ்மான் கான் சிறப்பாக விளையாடி 34 பந்தில் 44 ஓட்டங்கள் எடுத்து அக்சர் படேல் பந்தில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் பாகிஸ்தான் விக்கெட்டுகள் அடுத்ததாக சரிந்தது. இதனால் பாகிஸ்தான் 18 ஓவரில் 114 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் ஆகி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
பும்ரா, அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 3 போட்டிகளில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.
இரண்டாம் இணைப்பு
இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு 176 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்திய அணி சார்பில் அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

யாரும் எதிர்பார்க்காத வகையில் பாகிஸ்தான் அணியின் அணித்தலைவர் சல்மான் ஆகா முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் அபிஷேக் சர்மா ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அடுத்து இஷான் கிஷன் உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். திலக் வர்மா நிதானமாக விளையாட, இஷான் கிஷன் அதிரடியாக விளைாயாடினார். இதனால் இந்தியா பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 52 ஓட்டங்கள் எடுத்தது.
இஷான் கிஷன்
7ஆவது ஓவரை அப்ரார் வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி 27 பந்தில் அரைசதம் விளாசினார் இஷான் கிஷன். அத்துடன் அடுத்த பந்தையும் பவுண்டரிக்கு அடித்தார்.
அவர் 2 சிக்ஸ், 7 பவுண்டரியுடன் அரைசதம் விளாசினார். 9ஆவது ஓவரை சயீம் ஆயுப் வீசினார். இந்த ஓவரின் 3ஆவது பந்தில் பவுண்டரி அடித்த இஷான் கிஷன் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.

அவர் 40 பந்தில் 77 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 8.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 88 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
3ஆவது விக்கெட்டுக்கு திலக் வர்மா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். 12ஆவது ஓவரை முகமது நவாஸ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை திலக் வர்மா சிக்சர் அடித்தார்.
இதன் மூலம் இந்தியா 11.1 ஓவரில் 100 ஓட்டங்களை கடந்தது. 14 ஓவரில் 125 ஓட்ட்ங்களை தொட்டது. 15ஆவது ஓவரை சயீம் ஆயுப் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் திலக் வர்மா ஆட்டமிழந்தார்.
அவர் 24 பந்தில் 25 ஓட்டங்கள் எடுத்தார். 4-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார்.
ஹர்திக் பாண்ட்யா முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இந்தியா 14.3 ஓவரில் 126 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது.
5-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் ஷிவம் துபே ஜோடி சேர்ந்தார். 15 ஓவரில் இந்தியா 127 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இந்த ஓவரில் சயீம் ஆயுப் 2 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 16-வது ஓவரை நவாஸ் வீசினார்.
இந்த ஓவரில் 9 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார். 17-வது ஓவரை உஸ்மான் தாரீக் வீசினார். இந்த ஓவரி் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் இந்தியா 17 ஓவரில் 140 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
18-வது ஓவரை அப்ரார் வீசினார்.இந்த ஓவரில் இந்தியாவுக்கு தலா ஒரு பவுண்டரி, சிக்சர் கிடைத்தது. இதனால் இந்தியா 154 ஓட்டங்கள் எடுத்தது. 19-வது ஓவரை உஸ்மான் தாரீக் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்தார்.
இவர் 29 பந்தில் 32 ரன்கள் எடுத்தார். அப்போது இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்கள் எடுத்திருந்தது. 19-வது ஓவரில் தாரீக் 5 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி ஓவரை ஷாஹீன் அப்ரிடி வீசினார்.
முதல் பந்தை ஷிவம் துபே பவுண்டரி அடித்தார். 2-வது பந்தில் ஒரு ஓட்டங்கள் எடுத்தார். 3-வது பந்தை ரிங்கு சிங் பவுண்டரிக்கு விரட்டினார். 4-வது பந்தை சிக்கருக்கு தூக்கினார். 5-வது பந்தில் 2-வது ஓட்டங்களுக்கு ஓட முயன்றபோது ஷிவம் துபே ஆட்டமிழந்தார்.
கடைசி பந்தை அக்சர் படேல் சந்தித்தார். அதில் ஆட்டமிழந்தார். இதனால் இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ஓட்டங்கள் குவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
டி20 உலகக் கோப்பையில் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டியில் பாகிஸ்தான் வெற்றிப்பெற்று களத்தடுப்பை தீர்மானித்துள்ளது.
பாகிஸ்தான் அணித்தலைவர் சல்மான் ஆகா நாணயசுழற்சியில் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணியில் குல்தீப் யாதவ், அபிஷேக் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர் அர்ஷ்தீச் சிங், சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியில் அபிசேக் சர்மா, இசான் கிசான், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரிங்கு சிங், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்க மாட்டார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மஹா சிவராத்திரி 2026 நேரலை
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam