வடக்கு கடல் சீனாவிற்கு விற்பனை: இந்தியாவை அழைக்கும் கடற்றொழிலாளர்கள்

Sri Lankan Tamils China India
By Erimalai Nov 03, 2023 05:03 PM GMT
Report

இலங்கையின் வடக்கு மாகாணத்தினுடைய கடல் வளங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை சீனாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் இதனால் தாம் சுதந்திரமாக தொழிலில் கடத்தொழிலில் சுதந்திரமாக ஈடுபட முடியாது உள்ளதாகவும் வடக்கு கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக அமையத்தில் இன்றைய தினம்(03.11.2023)வடக்கு மாகாண கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அதில் கருத்து தெரிவித்த முன்னாள் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளங்களின் தலைவர் அன்னலிங்கம் அன்ராசா,

புலம்பெயர் மக்கள் தயார்! துப்பாக்கிகளுடன் நிற்கும் இராணுவமே ஒரே தடை: தமிழ் தொழிலதிபர் (Video)

புலம்பெயர் மக்கள் தயார்! துப்பாக்கிகளுடன் நிற்கும் இராணுவமே ஒரே தடை: தமிழ் தொழிலதிபர் (Video)

கடற்றொழிலாளர்களின் வேண்டுகோள்

“இன்றைய தினம் இந்த ஊடக சந்திப்பினுடைய பிரதன நோக்கம், மாவட்டத்திற்கதகு விஜயம் மேற்கொண்டிருக்கின்ற இந்தியாவின் மத்திய நிதி அமைச்சருக்கு வடக்கு கடற்றொழில் சமூகத்தின் ஒரு வேண்டுகோள் ஒன்றினை நாம் இந்த ஊடக வாயிலாக முன் வைத்திருக்கின்றோம்.

மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கையிலே கொழும்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் என்று குறுகிய நிகழ்வு நிரலிலே இங்கு வருகை தந்திருக்கின்ற இந்தியாவினுடைய நிதி அமைச்சருக்கு வடக்கு கடற்றொழிலாளர்கள் தயவான ஒரு வேண்டுகோளாக இது அமைகிறது.

வடக்கு கடல் சீனாவிற்கு விற்பனை: இந்தியாவை அழைக்கும் கடற்றொழிலாளர்கள் | India Should Intervene In Sales To China

அதாவது, இலங்கையிலே வடக்கு கடற்றொழிலாளர்கள் கடற்றொழில் திணைக்களத்தினால் எங்களுடைய வளங்களும், வாழ்வாதாரங்களும், சீன நாட்டுக்கு விற்கப்பட்டு, சீன எங்களுடைய இருப்பையே கேள்விக்குறியாக்குகின்ற நிலையிலே இலங்கையின் கடற்றொழில் திணைக்களமும், சீன நாடும் சேர்ந்து, வடக்கு கடற்றொழிலாளர்களை கடலை விட்டு அன்னியப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதனால் எங்களுடைய நாட்டிலே எங்களுடைய கடலிலே குறிப்பாக வடகிழக்கு கடலிலே நாங்கள் சுதந்திரமாக கடைற்றொழிலில் ஈடுபட்டு எங்களுடைய வாழ்வாதாரத்தை கொண்டு போக முடியாத நிலைக்கு சீனாவின் ஆதிக்கம் அதிகரித்திருக்கின்றது.

அதிலும் குறிப்பாக இம்மாதம் 6ஆம் திகதி சீன நாட்டு தூதுவர் கூட யாழ். மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொள்கின்றார்.

சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

சீன நாட்டு கடலட்டை பண்ணை

எங்களுடைய பகுதியிலே எங்களுடைய மக்களுக்கு கிடைக்கின்ற புரத மீனை, அல்லது கடல் உணவை பிடித்து தடைகளை ஏற்படுத்தி, இங்கே சீன நாட்டு கடலட்டை பண்ணைகளை உற்பத்தியாக்கி அதை சீன நாட்டில் இருப்பவர்களுக்கு உணவாக கொண்டு செல்வதற்கு முயற்சி எடுக்கின்றார்கள்.

இந்திய அரசாங்கத்திடமும், பாரத பிரதமரிடமும் பல தடவைகள் கோரிக்கைகளை விடுத்திருக்கின்றோம்.

வடக்கு கடற்பிரதேசத்திலே சீனாவின் ஆதிக்கம் இருக்கின்றது.சீனாவில் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி எங்களுடைய கடலில் நாங்கள் இறமையுடன் வாழ்ந்து தொழில் செய்வதற்கு எங்களுடைய வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கு ஏற்ற ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்திருக்கின்றோம்.

வடக்கு கடல் சீனாவிற்கு விற்பனை: இந்தியாவை அழைக்கும் கடற்றொழிலாளர்கள் | India Should Intervene In Sales To China

அந்த கோரிக்கையை இன்றும் இந்தியாவினுடைய நிதி அமைச்சருக்கு தயவான வேண்டுகோளாக நாங்கள் விடுகின்றோம். நீங்கள் எங்களுக்கு அண்டைய நாடு.

ஏங்களுக்கு தொப்புள் கொடி உறவாக தமிழ்நாடு இருக்கின்றது.

அந்த வகையிலே சீன நாட்டின் ஆதிக்கத்தை குறைப்பதற்க்கு வழிவகை செய்யவேண்டும். அதேபோன்று தமிழ்நாட்டுக்கும் இந்தியாவிற்கும் இடையிலே அல்லது தமிழ்நாட்டிற்க்கும் வட கிழக்குக்கும் இடையிலே இருக்கக்கூடிய தொப்புள் கொடி உறவுக்கு தடையாக இருக்கின்ற தமிழ்நாடு புதுச்சேரியைச் சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட இந்திய இழுவை படங்களினால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

இந்தப் பாதிப்பில் இருந்து எங்கள் வடக்கு கடத்தொழிலாளர்களை, எங்களுடைய வாழ்வாதாரம், அழிக்கப்படுவதிலிருந்து காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

அந்த நடவடிக்கை என்பது 2016 ஆம் ஆண்டு நவம்பர் ஐந்தாம் திகதி டில்லியிலே மேற்கொள்ளப்பட்ட இலங்கை இந்திய வெளி விவகார அமைச்சு மட்டத்திலே எட்டப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே இரண்டு நாடுகளும் அந்த இழுவைமடி தொழிலை முற்றாக நிறுத்துவதற்கு இணக்கம் எட்டப்பட்டது.

இந்தியா தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுத்தர வேண்டும்: இரா. சம்பந்தன் வேண்டுகோள்

இந்தியா தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுத்தர வேண்டும்: இரா. சம்பந்தன் வேண்டுகோள்

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம்

அதன் அடிப்படையிலேயே முன்கொண்டு செல்லப்பட்டு இந்த இழுவைமடி இந்திய படகுகளினால் எங்களுடைய கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரமும் தொழிலும் அழிக்கப்படுவதை நிறுத்தப்பட வேண்டும்.

அதேபோன்று பல உதவிகளுக்காக இந்தியாவிடம் கோரிக்கை விட்டிருந்தோம். கடற்றொழிலாளர்களுக்கு அந்த கோரிக்கைகள் இதுவரையும் சாதகமாக பரிசீலிக்கப்படவில்லையா என்கின்ற கேள்வியும் எங்களுக்கு எழுகிறது.

வடக்கு கடல் சீனாவிற்கு விற்பனை: இந்தியாவை அழைக்கும் கடற்றொழிலாளர்கள் | India Should Intervene In Sales To China

இந்த 2500 தமிழ்நாட்டு இழுவை மடி படகுகளின் ஆதிக்கம் வடக்கு கடலில் அதிகரிப்பதனால் தான் கடற்றொழில் திணைக்களம் சீன நாட்டை கொண்டு வந்துள்ளது.

அதாவது தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களுக்கு, வடக்கு கடற்றொழிலாளர்களுக்கும் பிரச்சினை இருக்கிறது என்று அரசாங்கமும், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து மீனவர்களை அந்த பக்கம் திசையை திருப்பி விட்டு மறுபுறத்திலே சீனாவைக் கொண்டு வந்து எங்களுடைய முற்றத்திலே நிறுத்துகின்ற செயற்பாட்டை மேற்கொள்கிறார்கள்.

இந்த சீன நாடு எங்களுடைய பகுதிக்கு நுழைவதற்கும், அந்த 2500 இந்திய இழுவைப் படகுகள் எங்களுடைய கடற்பகுதிக்கு வருவது தான் காரணமாக இருப்பதாக நாங்கள் உணர்கிறோம்.

எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த இழுவை மடி தொழிலாளர்களே உங்களுடைய இந்த 2500 இழுவை மடி படகுகளையும் நீங்கள் நிறுத்தி வடக்கு கிழக்கு கடத்தொழிலாளர்களை இலங்கை சீன ஆதிக்கத்திலிருந்து வெளியேற்றுவதற்கு நீங்கள் அந்த தொழிலை நிறுத்தி மாற்று தொழிலை மேற்கொள்ள வேண்டும் என்று தொப்புள் கொடி உறவு என்ற ரீதியிலே நாங்கள் தமிழ்நாட்டு இழுவை மடி மீனவர்களை தயவாக வேண்டி நிற்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் பயணித்த ஹெலிகொப்டர் திடீரென தரையிறக்கம்

ஜனாதிபதி ரணில் பயணித்த ஹெலிகொப்டர் திடீரென தரையிறக்கம்

மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US