இலங்கையிடம் 890 மில்லியன் ரூபா இழப்பீடு கோரும் இந்தியா: அமைச்சர் வெளியிட்டுள்ள காரணம்
நியூ டயமன்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ல் ஆகிய கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் ஆபத்தில் சிக்கியபோது வழங்கிய உதவிக்காக இலங்கை 890 மில்லியன் இந்திய ரூபாவை, இந்திய அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டியுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதற்கான கோரிக்கையை இந்திய அரசாங்கம் எழுத்துமூலம் இலங்கை அரசாங்கத்திடம் அறிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இழப்பீடு கேட்கும் இந்தியா
நியூ டயமன்ட் கப்பலின் தீயை அணைப்பதற்கும், சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுப்பதற்கும் இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படையுடன் இணைந்து இந்தியக் கடற்படையினர் கடுமையாகப் போராடினர்.
இதற்காக, 400 மில்லியன் ரூபாயை இந்தியா இழப்பீடாகக் கேட்டுள்ளதாக விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் ஆபத்தில் ஆழ்ந்தபோது மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளுக்காக 490 மில்லியன் ரூபாய்களையும் இந்தியா இழப்பீடாகக் கோரியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |