இலங்கை நாடாளுமன்ற குழுவினரை சந்தித்த இந்திய வெளியுறவு அமைச்சர்
புதுடில்லிக்கு சென்றுள்ள இலங்கையின் நாடாளுமன்றக் குழுவினரை, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின், ஜனநாயகத்திற்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்காக, இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதுடில்லிக்கு சென்றுள்ளனர்.
இந்தநிலையில், இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஸமீரின் பஹல்காம் தாக்குதல் குறித்து, இலங்கைக் குழு கண்டனம் தெரிவித்ததற்கும், அனுதாபம் தெரிவித்ததற்கும் அமைச்சர் ஜெய்சங்கர் நன்றியை தெரிவித்துள்ளார்.
பாதீட்டு செயல்முறை
வலுவான மக்கள் - மக்கள் என்ற உறவால் ஆதரிக்கப்படும், அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையைப் பற்றி இந்த சந்திப்பின்போது விவாதித்தாக இந்திய வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 24 இலங்கை பங்கேற்பாளர்கள் கொண்ட இலங்கைக் குழு, தற்போது இந்தியாவில் இந்த திட்டப்பயணத்தை மேற்கொண்டுள்ளது.
பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ் தலைமையிலான இந்தக்குழுவில் பல்வேறு அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் உட்பட இலங்கை நாடாளுமன்றத்தின் 4 அதிகாரிகள் அடங்குகின்றனர்.
2025 மே 26 முதல் 30 வரை ஒரு வாரம் நடைபெறும் இந்த பயிற்சி நிகழ்வில், நாடாளுமன்றம் மற்றும் பாதீட்டு செயல்முறைகளில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வது, நாடாளுமன்றக் குழுக்களின் அமைப்பு உட்பட்ட விடயங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 3 நாட்கள் முன்

பாதுகாப்பு அச்சுறுத்தல்... ஆயுதங்கள் வாங்கிக்குவிப்பதில் திடீர் ஆர்வம் காட்டும் ஆசிய நாடுகள் News Lankasri

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri
