இந்தியாவிற்கு முதல் முறையாக நேரடி விமான சேவை தொடங்கியுள்ள தென்கிழக்கு ஆசிய நாடு
இந்தியாவின்(India) தலைநகர் புதுடெல்லி மற்றும் கம்போடியாவின்(Cambodia) தலைநகர் பினோம் பென் இடையே முதல் முறையாக நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த விமான சேவையை கம்போடியாவின் துணை பிரதமர் நெத் சவோன் மற்றும் கம்போடியாவிற்கான இந்திய தூதர் தேவயானி கோப்ரகாடே ஆகியோர் நேற்று(16.06.2024) தொடங்கி வைத்துள்ளனர்.
4 விமான சேவைகள்
மேலும், கம்போடியாவைச் சேர்ந்த 'கம்போடியா அங்கோர் ஏர்' என்ற விமான நிறுவனத்தால் இரு நாடுகளுக்கும் இடையில் வாரத்திற்கு 4 விமான சேவைகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமான சேவையின் மூலம் சுற்றுலாத்துறை வளர்ச்சி அடைவது மட்டுமின்றி, இருநாடுகளுக்கு இடையிலான வரலாற்று உறவு மேலும் வலுவடையும் என கூறப்படுகிறது.
இது குறித்து கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகம், இது ஒரு வரலாற்று நிகழ்வு என குறிப்பிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri