இந்தியாவிற்கு முதல் முறையாக நேரடி விமான சேவை தொடங்கியுள்ள தென்கிழக்கு ஆசிய நாடு
இந்தியாவின்(India) தலைநகர் புதுடெல்லி மற்றும் கம்போடியாவின்(Cambodia) தலைநகர் பினோம் பென் இடையே முதல் முறையாக நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த விமான சேவையை கம்போடியாவின் துணை பிரதமர் நெத் சவோன் மற்றும் கம்போடியாவிற்கான இந்திய தூதர் தேவயானி கோப்ரகாடே ஆகியோர் நேற்று(16.06.2024) தொடங்கி வைத்துள்ளனர்.
4 விமான சேவைகள்
மேலும், கம்போடியாவைச் சேர்ந்த 'கம்போடியா அங்கோர் ஏர்' என்ற விமான நிறுவனத்தால் இரு நாடுகளுக்கும் இடையில் வாரத்திற்கு 4 விமான சேவைகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான சேவையின் மூலம் சுற்றுலாத்துறை வளர்ச்சி அடைவது மட்டுமின்றி, இருநாடுகளுக்கு இடையிலான வரலாற்று உறவு மேலும் வலுவடையும் என கூறப்படுகிறது.
இது குறித்து கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகம், இது ஒரு வரலாற்று நிகழ்வு என குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 17 மணி நேரம் முன்

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

விசா இருந்தும் தடுப்புக்காவல்! பாரிஸில் ஊழியருக்கு நடந்தது வெட்கக்கேடானது..ரஷ்யா கண்டனம் News Lankasri

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
