பிள்ளைகள் மத்தியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று
பிள்ளைகளுக்கு மத்தியில் கொரோனா வைரஸ் தொற்றுவது அதிகரித்துள்ளதாக றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுள்ள அவர், கொரோனா வைரஸ் தொற்று பிள்ளைகள் மத்தியில் பரவுவதை கடந்த சில தினங்களாக அதிகளவில் காண முடிவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனால், பெற்றோர்கள், பிள்ளைகளை நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து, பாடசாலை கட்டமைப்புகள் தொடர்ந்தும் இயங்க உதவ வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா பரவல் பிள்ளைகளுக்கு மத்தியில் தொடர்ந்தும் அதிகரித்தால், பாடசாலைகளை மூட நேரிடும். இதனால், பிள்ளைகள் தமது கல்வியை இடைவிடாது தொடர்வதற்கு மக்கள் உதவ வேண்டும். பிள்ளைகள் மற்றும் பிள்ளைகளின் கல்வியை பாதுகாப்பதற்காக அவசியமற்ற பயணங்களை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுப்பதாக மருத்துவர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam