பிள்ளைகள் மத்தியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று
பிள்ளைகளுக்கு மத்தியில் கொரோனா வைரஸ் தொற்றுவது அதிகரித்துள்ளதாக றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுள்ள அவர், கொரோனா வைரஸ் தொற்று பிள்ளைகள் மத்தியில் பரவுவதை கடந்த சில தினங்களாக அதிகளவில் காண முடிவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனால், பெற்றோர்கள், பிள்ளைகளை நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து, பாடசாலை கட்டமைப்புகள் தொடர்ந்தும் இயங்க உதவ வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா பரவல் பிள்ளைகளுக்கு மத்தியில் தொடர்ந்தும் அதிகரித்தால், பாடசாலைகளை மூட நேரிடும். இதனால், பிள்ளைகள் தமது கல்வியை இடைவிடாது தொடர்வதற்கு மக்கள் உதவ வேண்டும். பிள்ளைகள் மற்றும் பிள்ளைகளின் கல்வியை பாதுகாப்பதற்காக அவசியமற்ற பயணங்களை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுப்பதாக மருத்துவர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan