பயணத்தடை நீக்கப்பட்டதையடுத்து மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு
பயணக் கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை நீக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பொருட்கள் கொள்வனவு செய்வதில் ஆர்வத்துடன் காணப்பட்டதை வாழைச்சேனை, ஓட்டமாவடி, பிறைந்துறைச்சேனை பகுதிகளில அவதானிக்க முடிந்தது.
பொலிஸாரும் இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையிலும் பொது மக்களின் நடமாட்டம் கடைத்தெருக்களில் அதிகரித்தே காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பகுதியில் பொது சந்தை, வர்த்தக நிலையங்கள், மதுபானசாலை, வங்கிகள் என்பற்றில் பொது மக்களின் நடமாட்டம் அதிகரித்தே காணப்பட்டது.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்தி அதிகாரி அலுவலகத்தினால் வாழைச்சேனை பொது சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு அன்டிஜன் மற்றும் பீசீஆர் பரிசோதனைகளும் இடம்பெற்றன.