மன்னாரில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு (Photos)
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தில் கடந்த சில தினங்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த கிராமத்தில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று (04.01.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார திணைக்களம், மாந்தை மேற்கு பிரதேச செயலகம், பிரதேச சபை, பொலிஸார், மற்றும் உள்ளூர் அமைப்புகள் இணைந்து ஒருங்கிணைந்த டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
காணிகள் பரிசோதனை
இதன் போது குறித்த பிரதேசத்தில் கைவிடப்பட்ட காணிகள் பரிசோதனைக்கு உற்படுத்தப்பட்டதோடு குறித்த வீடுகளில் அடையாளம் காணப்பட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டு, பிரதேச சபையின் உதவியுடன் அகழ்ந்து கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும், விடத்தல் தீவில் உள்ள அதிகமான குடும்பங்கள் தமது வீடுகளை பூட்டி விட்டு மன்னார் தோட்டவெளி பகுதியில் வசித்து வருகின்றனர். கைவிடப்பட்ட காணிகள் மற்றும் வீடுகளில் மழை நீர் தேங்கி உள்ளமையினால் டெங்கு நுளம்பு உற்பத்தியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
இந்த நிலையில் சுகாதார துறை அதிகாரிகளால் குறித்த காணி உரிமையாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களுக்கு துண்டு பிரசுரம் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எதிர் வரும் 7 நாட்களுக்குள் அடையாளம் காணப்பட்ட காணிகள் துப்புரவு செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை மீறும் பட்சத்தில் குறித்த காணி உரிமையாளர்களுக்கு எதிராக மன்னார் நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக சுகாதார திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கல்விப் பொதுத் தராதர பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவுகள்: ஜனாதிபதி நடவடிக்கை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |












சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri
