தெற்காசிய நாடுகளில் இலங்கையில் தாய் மரணங்கள் அதிகரிப்பு
கோவிட் தொற்று நோய் காரணமாக சுகாதார துறை சீர்குலைந்துள்ளதால், தெற்காசிய நாடுகளில் சிறுவர் மற்றும் தாய் மரணங்கள் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
கோவிட் தொற்று நோய் நேரடியாக மற்றும் நேரடி அல்லாத வகையில் பாதிப்பு மற்றும் தெற்காசிய நாடுகளில் பதில் நடவடிக்கை என்ற அறிக்கைக்கு அமைய ஆப்கானிஸ்தான், நேபாளம், இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் சிறுவர் மற்றும் தாய் மரணங்கள் சுமார் 2லட்சத்து 39 ஆயிரம் நடந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நாடுகளில் இந்தியாவில் மாத்திரம் கடந்த ஆண்டு அதாவது 2020 ஆம் ஆண்டு சிறுவர் மரணங்கள் அதிகரித்துள்ளன.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இது 15.4 வீத அதிகரிப்பு என கூறப்படுகிறது. பங்களாதேஷ் நாட்டில் சிறுவர் மரணங்கள் 13 சத வீதமாக அதிகரித்துள்ளது.
எவ்வாறாயினும் இலங்கையில் அதிகளவான தாய்மாரின் மரணம் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது 21.5 சத வீதமாக அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் தாய் மரண வீதம் 21.3 வீதமாக அதிகரித்துள்ளது.
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam