கொத்து உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையில் மாற்றம்
இன்று நள்ளிரவு முதல் பல வகையான கொத்து உள்ளிட்ட உணவு வகைகளின் விலைகளை அதிகரிக்க இலங்கை உணவகங்கள் மற்றும் வெதுப்பாக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கை உணவகங்கள் மற்றும் வெதுப்பாக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் இன்று(04.11.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சீனி விலை அதிகரிப்பு
சீனி விலை அதிகரிப்பால் தேநீரின் விலை 5 ரூபாவினாலும் பால் தேநீரின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்குமென அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, அரிசி, மரக்கறிகள், கோழி இறைச்சி மற்றும் வெங்காயத்தின் விலை உயர்வினால், கொத்து மற்றும் பிரைட்ரைசின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam
