வடக்கு கிழக்கு மக்களை சமய ரீதியில் போருக்கு அழைக்கும் சம்பவங்கள்: மா.சத்திவேல்

Sri Lanka Sri Lankan Peoples Eastern Province Northern Province of Sri Lanka
By Shan May 04, 2023 10:10 AM GMT
Report

வடக்கு கிழக்கு மக்களை சமய ரீதியில் விரைந்து போருக்கு அழைப்பதாகவே அண்மைய சம்பவங்கள் நடக்கின்றன என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (04.05.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யுத்த வலிகளோடு அன்றாட வாழ்வியல் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும் வடக்கு கிழக்கு மக்களை சமய ரீதியில் விரைந்து போருக்கு அழைப்பதாகவே அண்மைய சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

வடக்கு கிழக்கு மக்களை சமய ரீதியில் போருக்கு அழைக்கும் சம்பவங்கள்: மா.சத்திவேல் | Incidents Of Religiously Calling People To War

பௌத்த - இந்து மோதல்

படையினரின் தேவைக்குத் தொடர்ந்து நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்களே தற்போது புதிது புதிதாகப் பௌத்த சின்னங்களையும், விகாரைகளையும், தூபிகளையும் அமைத்து ஆக்கிரமிப்பிற்கு புதிய வடிவம் கொடுப்பதோடு, இன்று பௌத்த- இந்து நேரடி மோதலுக்கும் வலிந்து அழைக்கின்றனர் என்பதை வலிகாமம் வடக்கு தையிட்டி நிகழ்வு எடுத்துக் காட்டுகின்றது. 

அரசியல் உள்நோக்கம் கொண்ட இச் செயற்பாட்டினை சமயம் கடந்து அனைத்து தரப்பினரும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்போடு கத்தோலிக்க மற்றும் முஸ்லிம்களுக்கு இடையில் மோதலை தூண்டி அரசியல் குளிர்காய நினைத்த சக்திகளும், அவர்களை இன்றும் பாதுகாக்கும் சக்திகளுமே அரச பயங்கரவாதத்தின் துணைகொண்டு தற்போது பௌத்த- இந்து மோதலை வடக்கிலே ஆரம்பிக்க முனைப்புக் காட்டுகின்றன.

வடக்கு கிழக்கு மக்களை சமய ரீதியில் போருக்கு அழைக்கும் சம்பவங்கள்: மா.சத்திவேல் | Incidents Of Religiously Calling People To War

கிறிஸ்தவ தலைமைத்துவங்கள் 

இதனை சமய நல்லிணக்கம் விரும்பும் அனைவரும் இதனைக் கண்டிப்பதோடு தனது பலத்த எதிர்ப்பையும் வெளிப்படுத்த வேண்டும்.

அடாத்தாக பௌத்த சின்னங்களை வைப்பதையும், விகாரைகள், தூபிகள் அமைப்பதையும் ஒரு சில கிறிஸ்தவ சமய அடிப்படை வாத சக்திகள் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவதையும் சமய நல்லிணக்கம் விரும்பும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இத்தகைய அநாகரீக செயல் கண்டிக்கப்பட வேண்டியதே. இந்நிலையில் கிறிஸ்தவ தலைமைத்துவங்கள் அறிக்கைகளுக்கு மட்டும் தம்மைக் கட்டுப்படுத்தி விடாது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தோடு கைகோர்த்து எழுந்து நிற்பதே தேசியத்தைப் பாதுகாக்கும் காலத்தின் அரசியல் செயற்பாடாகும்.

நில ஆக்கிரமிப்பிற்கும், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கில் கடையடைப்பு செய்த அனைத்து தரப்பினரும் தமிழ் மக்களின் தேசிய நலன் கருதி ஒன்றிணைய வேண்டிய காலம்.

வடக்கு கிழக்கு மக்களை சமய ரீதியில் போருக்கு அழைக்கும் சம்பவங்கள்: மா.சத்திவேல் | Incidents Of Religiously Calling People To War

இராணுவ மயம் தொடர்கின்றது

தையிட்டி மக்களுக்கு அவர்களுக்குரிய காணிகளைப் பெற்றுக் கொடுக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவது பிரதேசத்தையும், மக்களையும் பாதுகாக்கும் செயல் என்பதோடு தாயகத்தைக் காப்பதற்கான எதிர்கால செயற்பாட்டுக்கும் துணை செய்யும். 

இந்தியாவின் அரசியல் பிடிக்குள் இருந்து இலங்கை தம்மை விடுவித்துக் கொள்ள நினைக்கும் பின்னணியில் அதனை உணர்ந்து செயல்படும் இந்தியா அன்று உணவு பொட்டலங்களைப் பலவந்தமாகக் கொண்டு வந்து போட்டது போன்று எந்த காரியத்தையும் அவசரமாகப் போவதில்லை.

இந்தியாவின் அமைதி காத்தலைப் பாவித்து பௌத்த மட்டும் இராணுவ மயம் தொடர்கின்றது. அரசியல் நுண் அறிவோடும் மக்கள் சக்தியோடும் முன்னெடுக்கும் நகர்வுகளே ஆக்கிரமிப்பைத் தடுக்கும்.இலக்கு நோக்கிய அரசியல் பயணத்திற்கும் வழிவகுக்கும் எனத் தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US