தம்பலகாமம் தாயிப் நகரில் நெசவு கைத்தறி நிலையம் திறந்து வைப்பு
தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் உள்ள மீரா நகர் கிராம சேவகர் பிரிவின் தாயிப் நகரில் கைத்தறி நெசவு உற்பத்தி நிலையம் நேற்று (2024.10.08) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனம் ஒன்றின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட குறித்த திட்டத்துக்கான அங்குரார்ப்பண வைபவத்தில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ளார்.
சான்றிதழ்கள் வழங்கல்
நெசவு உற்பத்தி துறை சார் பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்களும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன. பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஒரு திட்டமாக காணப்படுகிறது.
இதில் தம்பலகாமம் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப், கிராம உத்தியோகத்தர், முஸ்லிம் எயிட் நிறுவன உத்தியோகத்தர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |