ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலை தொடர்பில் வெளியான முக்கிய அறிக்கை
காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலையில் வெளிநாட்டு அரசுகளுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என கனடா விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கூட்டாட்சி தேர்தல் செயல்முறைகள் மற்றும் ஜனநாயக நிறுவனங்களில் வெளிநாட்டு தலையீடு குறித்த பொது விசாரணை(Public Inquiry Into Foreign Interference in Federal Electoral Processes and Democratic Institutions') என்ற தலைப்பில் 123 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில் குறித்த தகவல் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் கடந்த 2023ஆம் ஆண்டு கொல்லப்பட்ட காலிஸ்தான் அடைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகீர் குற்றச்சாட்டுகளைச் முன்வைத்திருந்தார்.
இந்தியா வலியுறுத்து
இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த இந்தியா, ஆதாரங்களை வெளியிடுமாறு வலியுறுத்தியது.

இதனால் இரு நாட்டு உறவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இரு நாடுகளும் தங்கள் தூதர்களையும் கூட திரும்பப்பெற்றுக்கொண்டன.
இதன்படி நிஜ்ஜர் கொலை தொடர்பாக விசாரிக்கக் கனடா நாட்டின் அரசே ஆணையம் ஒன்றை அமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan