மீண்டும் வாகன இறக்குமதி செய்வது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் அளித்த பதில்
வாகன இறக்குமதி தொடர்பில் இலங்கை மத்திய வங்கியிடம் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
வாகனங்களை மீண்டும் இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்து இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி ஆளுநரின் பதில்

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தற்போதைக்கு அனுமதி வழங்க முடியாது என வங்கி ஆளுநர் கலந்துரையாடலில் தெரிவித்ததாக சங்கத்தின் தலைவர் என்.கே.கமகே தெரிவித்தார்.
இந்நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நியச் செலாவணி நெருக்கடியால், வாகன இறக்குமதி கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam