இலங்கையில் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு - அதிர்ச்சி தகவல் வெளியிட்ட புலனாய்வு பிரிவு
பாடசாலை மற்றும் பல்கலைக்கழகளில் ஐஸ் போதைப்பொருள் வேகமாக பரவியுள்ளதாக பொலிஸ் புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
8ஆம் வகுப்பு முதல் உயர்தரம் வரையில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலரும், பல்கலைக்கழக மருத்துவ, பொறியியல் பீடங்களில் பயிலும் இளைஞர்கள் சிலரும் ஐஸ் போதை பொருளுக்கு அடிமையாகி இருப்பது தெரியவந்துள்ளது.
ஐஸ் குடித்தால் உறக்கம் வராது எனவும் இதனால் இரவில் படிக்க முடியும் என்ற தவறான எண்ணமுமே இதனை பயன்படுத்த முக்கிய காரணம் என புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
போதை பொருள் கடத்தல்காரர்கள் முதலில் பாடசாலை அளவில் மாணவர்களுக்கு கடனுக்கு வழங்குகின்றனர். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதற்கு பின்னர் அடிமையான பிறகு, கடனை அடைக்க சிறுவர்களை ஐஸ் போதைப்பொருளை விற்க வைப்பதையும் புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன.
சில வழிபாட்டுத் தலங்களின் மதகுருமார்கள், சில பொலிஸ் அதிகாரிகள், சில பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் ஐஸ் குடிக்கும் பழக்கத்திற்குள்ளாகி உள்ளதாக புலனாய்வு அமைப்புகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த காலங்களில் பாரியளவில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தற்போது ஐஸ் போதைப்பொருள் கடத்தலுக்கு மாறியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக கடந்த காலங்களில் பல பொலிஸ் அதிகாரிகள் ஐஸ் போதைப்பொருளுடன் பிடிபட்டுள்ளதாக கூறப்படுகிறது.


தேர்தல்வாதிகளே சிந்தியுங்கள்..! 1 நாள் முன்

குழந்தை நட்சத்திரம் நடிகை சாராவா இது? கையில் சிகரெட்டுடன் வெளியான புகைப்படம்! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் Manithan

இளவரசர் ஹரியுடன் அந்தரங்க உறவு: 21 ஆண்டுகள் தந்தையிடம் மறைத்த பெண் தற்போது வெளியிட்டுள்ள தகவல் News Lankasri

விவாகரத்து பெற்று தனியாக வாழும் நடிகை மஞ்சு வாரியரின் முதல் கணவர் யார் தெரியுமா?- அவரும் நடிகரா? Cineulagam

துருக்கியில் மீண்டும் சக்தி வாய்ந்த பூகம்பம்! சீட்டு கட்டுகள் போல சரிந்த பிரம்மாண்ட கட்டிடங்களின் வீடியோ News Lankasri

அக்கா, தங்கையை திருமணம் செய்த நவரச நாயகன்! பல ஆண்டுகள் கழித்து இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் Manithan
