கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பநிலை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள கணினி அமைப்பு செயலிழந்துள்ளதால் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
எனினும் தற்போது விமான நிலையம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. வருகை மற்றும் புறப்பாடு முனையங்களில் நிறுவப்பட்ட 'எல்லைக் கட்டுப்பாட்டு கணினி அமைப்பு' இன்று பிற்பகல் 01.45 மணியளவில் செயலிழந்ததாக விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக, தானியங்கி அமைப்புக்கு வெளியே பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கணினி அமைப்பு
எனினும் 02 மணி நேரத்திற்கும் மேலாக கணினி அமைப்பை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தனியார் நிறுவனத்தால் நிறுவப்பட்டு பராமரிக்கப்படும் இந்த கணினி அமைப்பில் பல சந்தர்ப்பங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளன.
மேலும் பெரும்பாலான நாட்களில் பிற்பகலில் இந்த அமைப்பு மெதுவாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri