நாடு முழுவதும் பறந்த அவசர உத்தரவு - பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு
காய்ச்சல் மற்றும் தோல் தடிப்புகள் போன்ற அறிகுறிகளுடன் வரும் நோயாளிகள் தொடர்பில் உடன் அறிவிக்குமாறு அனைத்து மருத்துவ நிபுணர்களுக்கும் சுகாதார அமைச்சு அவசர உத்தரவொன்றை பிறப்பித்துள்ளதாக தெரியவருகிறது.
ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் சமூக சுகாதார நிபுணர் அதுல லியனபதிரன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தட்டம்மை நோய் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் எந்தவொரு நிகழ்வையும் தேசிய கண்காணிப்பு அமைப்பு மூலம் உடனடியாகத் தெரிவிக்குமாறு அனைத்து மருத்துவ நிபுணர்களுக்கும் சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
காய்ச்சல் மற்றும் தோல் தடிப்புகள் போன்ற அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளை, கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைக்காக சுகாதார அதிகாரிகளுக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.
தடுப்பூசி பெறுவதே தீர்வு
அத்தகைய நோயாளிகளை மேலதிக சிகிச்சை மற்றும் முறையான கண்காணிப்பிற்காக அரச மருத்துவமனைகளுக்குப் பரிந்துரைக்குமாறு தனியார் மருத்துவமனைகளில் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார். நோய் பரவுவதைத் தடுப்பதற்குத் தடுப்பூசியே மிகவும் பயனுள்ள முறையாகும்.

ஒன்பது மாதங்கள் முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகள் தட்டம்மைத் தடுப்பூசியின் குறைந்தபட்சம் ஒரு டோஸையாவது பெற்றிருக்க வேண்டும். அதேநேரத்தில் மூன்று முதல் 15 வயது வரையிலான குழந்தைகள் இரண்டு டோஸ்களையும் முடித்திருக்க வேண்டும்.
தங்களுக்கோ அல்லது தங்கள் குழந்தைகளுக்கோ காய்ச்சலுடன் தோல் தடிப்புகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, கடந்த மாதம் இரண்டு புதிய தட்டம்மை நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு கண்டறியப்பட்ட முதல் நோயாளிகளாகும். இருப்பினும், அந்த நோய்த்தொற்று நாட்டில் தோன்றவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 14 மணி நேரம் முன்
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri