சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானம் குறித்து 21ம் திகதி அறிவிப்பு!
இலங்கைக்கு வழங்கப்படவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி குறித்து 21ம் திகதி முக்கிய அறிவிப்பொன்று வெளியிடப்படவுள்ளது.
இலங்கை எதிர்பார்க்கும் கடன் வசதிகளை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் கூட்டம் மார்ச் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
முக்கிய தீர்மானம்
அதன் பின்னர், இந்த செயற்குழுவில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்து தெரிவிக்கும் வகையில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க நேரப்படி 20ஆம் திகதி பிற்பகல், அதாவது இலங்கை நேரப்படி 21ஆம் திகதி காலை ஊடகவியலாளர் மாநாடு நடைபெறவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தூதரகத்தின் தலைவர் மசாஹிரோ நோசாகி ஆகியோர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவிக்கின்றது.
முத்துவிடம் ரோஹினி பற்றிய முழு உண்மையை கூறிய PA தினேஷ்... சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam
பூஜையில் வெளிவந்த பயங்கரமான விஷயம், ஷாக்கான குடும்பத்தினர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
18 நாள் முடிவில் ராதிகாவின் தாய் கிழவி திரைப்படம் செய்துள்ள மாஸ் கலெக்ஷன்... எவ்வளவு தெரியுமா? Cineulagam