சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானம் குறித்து 21ம் திகதி அறிவிப்பு!
இலங்கைக்கு வழங்கப்படவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி குறித்து 21ம் திகதி முக்கிய அறிவிப்பொன்று வெளியிடப்படவுள்ளது.
இலங்கை எதிர்பார்க்கும் கடன் வசதிகளை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் கூட்டம் மார்ச் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
முக்கிய தீர்மானம்
அதன் பின்னர், இந்த செயற்குழுவில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்து தெரிவிக்கும் வகையில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க நேரப்படி 20ஆம் திகதி பிற்பகல், அதாவது இலங்கை நேரப்படி 21ஆம் திகதி காலை ஊடகவியலாளர் மாநாடு நடைபெறவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தூதரகத்தின் தலைவர் மசாஹிரோ நோசாகி ஆகியோர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவிக்கின்றது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம் News Lankasri

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள் Cineulagam

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri
