இலங்கைக்கு கிடைத்துள்ள 350 மில்லியன் அமெரிக்க டொலர்!
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து, ஜூலை 3 ஆம் திகதி 5ஆவது தவணையாக 350 மில்லியன் அமெரிக்க டொலர் பெறப்பட்டதாக அரச நிதிக் கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கபில சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, சர்வதேச நாணய நிதியம் இதுவரை நாட்டிற்கு 1.74 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது என கூறியுள்ளார்.
நிதிக் கொள்கை
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரச நிதிக் கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கபில சேனநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதிகள் தொடர்பான தற்போதைய நிலைமையை தெளிவுபடுத்துவதற்காக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை கோரிய கடன் தொகை 9 தவணைகளில் பெறப்பட உள்ளதாகவும், அவற்றில் 5 தவணைகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 11 மணி நேரம் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
