அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
கடந்த 6 மாத காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 2.2 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் வாராந்திர பொருளாதார அறிக்கைக்கமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது கையிருப்பில் உள்ள நாணயத்திலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வணிக வங்கிகள்
புழக்கத்தில் உள்ள பணத்தின் அதிகரிப்பு மற்றும் வணிக வங்கிகள் மத்திய வங்கியில் வைத்திருக்கும் வைப்புத்தொகை அதிகரிப்பு இதற்கான காரணமாகும்.
அண்மைக்காலமாக சுற்றுலா பயணிகளின் வருகையில் ஏற்பட்ட அதிகரிப்பு மற்றும் ஆடை துறை ஏற்றுமதியில் ஏற்பட்ட அதிகரிப்பு என்பனவற்றினால் அதிகளவான டொலர்கள் உள்வந்தமை இதற்கான பிரதான காரணங்களாகும்.





சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
