வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் ஜனாதிபதியை சந்திக்க எடுத்துள்ள முயற்சி!
கடற்தொழிலாளர்களின் பிரச்சினை குறித்தும் அந்த பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடுவது குறித்ததுமான மனு வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்தொழிலாளர்களின் சட்டவிரோத இழுவை மடி மீன்பிடி நடவடிக்கைகளால் வடக்கு மாகாண கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பாதிப்புக்கள் தொடர்பாகவும், இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பிலும் நடவடிக்கை எடுப்பதற்காகவும் இந்த சந்திப்பை நடத்த வேண்டும் என கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோரிக்கை
வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள், வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து ஆளுநர் செயலகத்தில் வைத்து இன்று புதன்கிழமை (10.12.2025) இக்கோரிக்கை கடிதத்தை கையளித்தனர்.

பல்வேறு இடர்பாடுகளின் போதும் இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கி வருகின்ற உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்திய கடற்தொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத இழுவைமடி மீன்பிடி முறையால் வடக்கு மாகாண கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் கடல்வளம் என்பன எவ்வகையில் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன என்பது குறித்தும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மனு
எனவே, இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவதற்குத் தமக்குச் சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்தித் தருமாறும் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தினர் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தால் கையளிக்கப்பட்ட மனுவை ஏற்றுக்கொண்ட ஆளுநர், அதனை உடனடியாகவே ஜனாதிபதியின் கவனத்துக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam