சமூக வலைத்தள காணொளியால் சிக்கிய சட்டவிரோத செயல்!
சட்டவிரோத தெரு பந்தய நிகழ்வு ஒன்று குறித்து ஹோமாகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டு தினத்தன்று நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம், சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் காணொளியில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
முன் அனுமதி
இந்நிலையில், பந்தயத்தை நடத்துவதற்கு எந்தவொரு தொடர்புடைய அதிகாரியிடமிருந்தும் முன் அனுமதி பெறப்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
குறித்த வீதிகள் சுத்தம் செய்யப்படவில்லை எனவும் இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காணொளி ஏப்ரல் 13 அன்று இரவு 11:43 மணிக்கு முகப்புத்தகத்தில் 'பாக்கெட் ராக்கெட்ஸ் கிளப்' என்ற குழுவால் பதிவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத தெரு பந்தயம்
காட்சிகளின்படி, ஹோமாகமவில் உள்ள வீதியில் கலவிலவத்தையில் பகுதியில் பாதசாரிகள் கடக்கும் இடத்தில் இருந்து சட்டவிரோத தெரு பந்தயம் தொடங்கியதாகத் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர்.
இந்த பந்தயம் சாரதிகளுக்கும் பொதுமக்களுக்கும் குறிப்பிடத்தக்க சிரமத்தை ஏற்படுத்தியதாகக் கூறி, அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் முறைப்பாடு அளித்ததாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அங்கீகரிக்கப்படாத தெரு பந்தயத்தை ஏற்பாடு செய்து பங்கேற்பதில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
