சட்டவிரோத கடற்றொழிலுக்கு தடை விதிக்கப்பட வேண்டும்..! ஈ.பி.டி.பி கட்சி உறுப்பினர் சுட்டிக்காட்டு

Batticaloa Sri Lankan Peoples Sri Lanka Government Sri Lanka Fisherman
By Bavan May 07, 2026 06:15 AM GMT
Report

மட்டக்களப்பு - பூநொச்சிமுனை தொடக்கம் பெரிய நீலாவணை வரை உள்ள சட்டவிரோத 47 சுருக்குவலை மற்றும் டைனமட் பயன்படுத்தி மீன்பிடி கடல் வளத்தை அழித்து வருபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரம் முன்வர வேண்டும் என ஈ.பி.டி.பி கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு - பாலமீன்மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் நேற்று(06.05.2026) ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நொடிக்கு நொடி அதிகரிக்கும் எதிர்பார்ப்பு! நீலாங்கரை இல்லத்திலிருந்து பொலிஸாருடன் அவசரமாக புறப்பட்ட விஜய்

நொடிக்கு நொடி அதிகரிக்கும் எதிர்பார்ப்பு! நீலாங்கரை இல்லத்திலிருந்து பொலிஸாருடன் அவசரமாக புறப்பட்ட விஜய்

சட்டவிரோத கடற்றொழிலின் தாக்கம் அதிகரிப்பு

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடலை நம்பி மீன்பிடியில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் வாழ்வாதாரத் தொழிலாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சட்டவிரோதமான செயற்பாடுகளாக டைனமட் அடித்து மீன் பிடிப்பது மற்றும் தடை செய்யப்பட்ட சுருக்கு வலை பயன்படுத்தி சிலர் கடற்றொழிலில் ஈடுப்படுகிறார்கள்.

எனவே, அதனை நிறுத்துவதற்கு கடற்றொழில் நீரியல் வள உதவி பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். மட்டக்களப்பு- நாவற்குடா, பூநொச்சிமுனை தொடக்கம் பெரியநீலாவணை வரையும் கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர்கள் சிலர் உட்பட 47 பேர் சட்டவிரோத சுருக்குவலை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுப்பட்டு வருகின்றார்கள்.

சட்டவிரோத கடற்றொழிலுக்கு தடை விதிக்கப்பட வேண்டும்..! ஈ.பி.டி.பி கட்சி உறுப்பினர் சுட்டிக்காட்டு | Illegal Fishing Should Be Banned

இந்த சுருக்கலை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்டு வருபவர்களுக்கு எதிராக மாவட்ட கடற்றொழில் நீரியல் வள உதவி பணிப்பாளர் விசேட அதிரடிப்படை, கடற்படையுடன், இணைந்து இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவுவதுடன், இந்த கடல் வளத்தை பாதுகாக்க முன்வர வேண்டும் என மீன்பிடி அமைச்சர் சந்திரசேகரம் கேட்டுக் கொள்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத சுருக்குவலை பாவித்து கடற்றொழிலில் ஈடுப்படுவதால் கீரி மீன்பிடி வலையை வைத்து கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, கிழக்கு மாகாணத்தின் கடற்றொழிலாளர் தொழிற் சங்கத்தின் தலைவர் நற்குணம் பத்மநாதன் ஈ.பி.டி.பி கட்சியிடம் இந்த சட்டவிரோத சுருக்குவலை பாவித்து கடற்றொழிலில் ஈடுபட்டு வருவது தொடர்பாக வெளிக் கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த ஊடக மாநாட்டை நடத்தப்படுகிறது.

முற்றாக அழியும் கடற்றொழில்

இந்த கீரி மீன் பிடிக்கும் தொழிலில் சட்டவிரோதமான சுருக்கு வலைகளை பாவித்து பூநொச்சிமுனை, காத்தான்குடி, செட்டிபாளையம், தேற்றாதீவு, மாங்காடு, களுதாவளை,களுவாஞ்சிக்குடி ,கல்லாறு பெரியநீலாவணை வரை கடற்றொழிலில் ஈடுப்படுகிறார்கள்.

இவர்கள் இரவில் மீன் இறங்கி வருகின்ற மீன்களை இந்த சுருக்கு வலையால் வளைத்து ஒருவர் ஆயிரம் கிலோ கிராம் மீன்களை பிடித்து வந்து, அதனை மிகவும் குறைந்த விலையில் கிலோ 300 ரூபாய் வீதம் விற்று வருகின்றனர்.

சட்டவிரோத கடற்றொழிலுக்கு தடை விதிக்கப்பட வேண்டும்..! ஈ.பி.டி.பி கட்சி உறுப்பினர் சுட்டிக்காட்டு | Illegal Fishing Should Be Banned

இருந்த போதும், இங்கு பல ஆண்டுகளாக இந்த கீரி வலையை நம்பி தொழில் செய்து வருகின்ற கடற்றொழிலாளர்களுக்கு ஒரு கிலோ அல்லது இரண்டு கிலோ மட்டும் பிடிபடுகிறது.

எனவே, இந்த சட்டவிரோத சுருக்குவலை தொடர்பாக எங்களுக்கு கிடைக்கும் தகவல் மாதிரி கடற்றொழில் நீரியல்வள பணிப்பாளர் மற்றும் அந்தந்த பிரதேச கடற்றொழில் பரிசோதகர்களுக்கும் தகவல் கிடைக்கும்.

இவ்வாறு தகவல் கிடைத்தும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன், மாவட்டத்தில் சட்டவிரோத சுருக்கு வலை பயன்பாட்டை நிறுத்த வேண்டும். இல்லையெனின், எதிர்காலத்தில் பிடிப்பதற்கு மீன்கள் இல்லாமல் போய் விடும் என்றார். 

40 கோடியில் சிக்கும் மகிந்தவின் மனைவி.. அம்பலமாகும் புதிய இரகசியம்!

40 கோடியில் சிக்கும் மகிந்தவின் மனைவி.. அம்பலமாகும் புதிய இரகசியம்!

அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் லண்டனில் யூதர்களின் பாரம்பரிய திருவிழா

அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் லண்டனில் யூதர்களின் பாரம்பரிய திருவிழா



1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US