திருகோணமலை கடற்கரை சட்டவிரோத கட்டுமான விவகார வழக்கு ஒத்திவைப்பு
திருகோணமலை பிரதான டச்பே கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத கட்டுமானம் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர்சிலை விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று(17) திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சட்டவிரோத கட்டுமானம் தொடர்பில் மூவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டப்பணம் செலுத்தியுள்ளதுடன், வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 8ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வாயில் இரத்தக் கறைகளுடன் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 22 வயது யுவதி! வீட்டிற்கு வந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி
25,000 ரூபா தண்டப்பணம்
இன்றைய தினம் இவ்வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 10 பேர் மற்றும் இதுவரை நீதிமன்றில் முன்னிலையாகாத மூவர் உட்பட மொத்தம் 13 பேர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
இதன்போது, புதிதாக முன்னிலையான மூவரும் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர்களுக்கு தலா 25,000 ரூபா தண்டப்பணம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்கள் தண்டப்பணத்தைச் செலுத்தி வழக்கில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அத்துடன், இந்த வழக்குடன் தொடர்புடைய மேலும் இருவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்டவிரோத கட்டுமானம் தொடர்பில் மூவர் குற்றத்தை ஒப்புக்கொண்ட போதிலும், சர்ச்சைக்குரிய புத்தர்சிலை நிறுவியமை மற்றும் பொலிஸார் மீதான தாக்குதல் உள்ளிட்ட ஏனைய குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், ஏனைய குற்றங்களுக்கான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு தாக்கல்
கரையோர பாதுகாப்பு சட்ட அதிகாரத்திற்கு அமைய, குறித்த சட்டவிரோத கட்டுமானத்தை உடைத்து அகற்ற கரையோர பாதுகாப்புத் திணைக்களத்திற்கு எவ்வித தடையும் இல்லை எனவும், அப்பகுதியில் புத்தர்சிலைக்காக சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தினை அகற்ற முடியும் எனவும் நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் 16, 17ஆம் திகதிகளில் திருகோணமலை பிரதான டச்பே கடற்கரையில் இருந்து சுமார் 11 மீற்றருக்கு உட்பட்ட பகுதியில், கடலோரப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை மீறி சட்டவிரோதமான முறையில் கட்டுமானங்களை மேற்கொண்டு, புத்தர் சிலையை நிறுவி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பில் திருகோணமலை துறைமுக பொலிஸாரினால் 17.11.2025 அன்று நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தங்கத்தை கொண்டு வந்த விமானிக்கு நேர்ந்த கொடூரம்! வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்..
9 பேர் விளக்கமறியல்
இவ்வழக்கு தொடர்பாக கடந்த ஜனவரி 14ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த கல்யாண வன்ச திஸ்ஸ தேரர், பலாங்கொட கஞ்சப தேரர், திருகோணமலை சுவித வன்ச திஸ்ஸ தேரர், நந்த தேரர் ஆகிய 4 பௌத்த பிக்குகள் உட்பட 9 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

பின்னர் மேலும் ஒருவர் சரணடைந்ததை அடுத்து 10 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது. எதிரித் தரப்பால் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு பிப்ரவரி 3ஆம் திகதி தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், திருகோணமலை மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் கோரப்பட்டது.
இதனையடுத்து, கடந்த பிப்ரவரி 11ஆம் திகதி 4 பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேருக்கும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகள் மற்றும் பத்தாயிரம் ரூபா காசுப்பிணை உள்ளிட்ட பல கடுமையான நிபந்தனைகளின் கீழ் மேல் நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



