திருகோணமலையில் சட்டத்திற்கு முரணான கட்டுமான முயற்சி: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
திருகோணமலை - மூதூர் இந்து இளைஞர் மன்றத்தின் காணியினுள் சட்டத்திற்கு முரணான வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்றத்தின் போசகர் பொ. சச்சிவானந்தம் தெரிவித்துள்ளார்.
இது அவர் மேலும் தெரிவிக்கையில்,
"மூதூர் ஜாயா நகர் கிராம சேவகர் பிரிவில், மணிக்கூட்டுக் கோபுரத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள குறித்த காணியானது நீண்டகாலமாக இந்து இளைஞர் மன்றத்தினால் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது..
மன்றத்திற்கு சொந்தமான இக்காணியை சிலர் போலி ஆவணங்களை தயாரித்து அபகரிக்க முயல்கின்றனர்.
குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு
இது தொடர்பாக மூதூர் பொலிஸ் நிலையத்திலும், திருகோணமலை விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவிலும் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இக்காணி அபகரிப்பு தொடர்பாக திருகோணமலை பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டதைத் தொடர்ந்து கடந்த மாதம் 10ஆம் திகதி காணி அபகரித்தோர் உட்பட, முறைப்பாட்டாளர்களையும் மூதூர் பொலிஸ் உத்தியோகத்தர்களையும் அழைத்து விசாரணை இடம்பெற்றது.
இதன்போது ஆவணங்களை பார்வையிட்ட பொலிஸார் சம்பந்தப்பட்ட நபர்களை காணிக்குள் நுழையக் கூடாது என எச்சரித்ததோடு விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவிலும் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ளுமாறு மன்றத்தினரை பணித்திருந்திருந்தார்.
அதற்கமைய கடந்த மாதம் 26ஆம் திகதி விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவிலும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய கட்டுமானப்பணி
ஆனால், காணியினுள் பொலிஸாரின் உத்தரவையும் மீறி சட்டத்திற்கு முரணான வகையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இச்செயற்பாடானது, இனங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையாகும்.
அதுமட்டுமன்றி குறித்த நபர்கள் இது போன்ற பல குற்றங்கள் செய்தமை தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் உள்ளன என விசாரணையின்போது பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்." என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பாக மாவட்ட செயலாளர் மற்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கும் எழுத்து மூலமாக மன்றம் அறிவித்துள்ளதாகவும் மன்றத்தின் போசகர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 7 மணி நேரம் முன்

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan
