சித்திரைப் புத்தாண்டில் இருந்தாவது தமிழரசுக் கட்சி ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும்: சி.வி.கே வேண்டுகோள்

Sri Lankan Tamils Ilankai Tamil Arasu Kachchi
By Rakesh Apr 14, 2024 02:08 AM GMT
Report

இலங்கைத் தமிழரசுக் கட்சியினராகிய நாம், சித்திரைப் புத்தாண்டில் இருந்தாவது பேதங்களைக் களைந்து நபர்களாகவோ, கூட்டாகவோ, அணிகளாகவோ நின்று பேசுவதைத் தவிர்த்துக் குறிப்பாக அணிகள் என்ற நிலையைத் தவிர்த்து கட்சி என்ற ஒரு பொதுச் சிந்தனையில் வந்து ஒற்றுமையாக ஒரே கட்சியாகச் செயற்படுவோம் என்று சபதம் எடுக்க வேண்டும்.

அதற்கான செயற்பாடுகளில் யாவரும் ஈடுபட வேண்டும் என்றும் விநயமாகக் கேட்டுக்கொள்கின்றேன் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம்(C. V. K. Sivagnanam) கட்சி உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, "தமிழ் மக்களின் அடையாளமாக இருந்து வருகின்ற எங்களுடைய தமிழரசுக் கட்சி இப்போது நீதிமன்றத்தில் வந்து நிற்கின்றது.

தேர்தல்களைக் குறிவைத்து உருவாகவுள்ள புதிய இடதுசாரிக் கூட்டணி

தேர்தல்களைக் குறிவைத்து உருவாகவுள்ள புதிய இடதுசாரிக் கூட்டணி

இடைக்காலத் தடை

இதனால் எமது கட்சியின் புதிய பதவி நிலைகளுக்கு நீதிமன்றம் தற்போது இடைக்காலத் தடை விதித்திருக்கின்றது. இது மிகவும் வருந்தத்தக்க ஒரு விடயம். இது ஒரு சிவில் வழக்கு என்பதால் நீண்ட காலத்திற்குப் போகக்கூடிய ஆபத்தும் இருக்கின்றது.

இந்த விடயத்தை சுமுகமாகத் தீர்க்க வேண்டும் என்று கட்சியின் மூத்த ஓர் உறுப்பினராக எங்களுடைய கட்சிக்காரர்களிடம் ஒரு விண்ணப்பத்தை நான் முன்வைக்கின்றேன்.

சித்திரைப் புத்தாண்டில் இருந்தாவது தமிழரசுக் கட்சி ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும்: சி.வி.கே வேண்டுகோள் | Illankai Tamil Arasu Kachchi Should Act Unitedly

ஏனெனில் குறிப்பாக இந்த வழக்கில் - தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் யாரும் இடைபுகு வாய்ப்பும் ஏற்பாடுகளும் அந்தச் சட்ட கோவையில் இருக்கின்றன.

அந்த அடிப்படையில் எங்களுடைய கட்சி உறுப்பினர் ஒருவர் ஏற்கனவே அந்த இடைபுகு மனுவையும் தாக்கல் செய்திருக்கின்றார். இவ்வாறு எல்லாம் தொடர்ந்தால் இந்த வழக்கு நீண்டு செல்கின்ற சூழல் ஏற்படும்.

இவ்வாறான நிலைமையில் தேர்தல் ஒன்று வருகின்றபோது எங்களுடைய கட்சி ஒரு பலவீனமான நிலையிலே செயற்பாடற்ற இயங்கு நிலை இல்லாத ஒரு கட்சியாக இருக்கக்கூடிய சூழல் உருவாகின்றது.

ஊஞ்சல் உடைந்து விழுந்ததில் படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி

ஊஞ்சல் உடைந்து விழுந்ததில் படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி

கட்சியின் யாப்பு 

ஆகையினால் இவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும். கட்சியை உடனடியாக இயங்கு நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்றால் எங்களுக்கு இடையே இருக்கின்ற கருத்து வேறுபாடுகளை மறந்து நாங்கள் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கின்றமையை விடுத்து அதாவது பரஸ்பர குற்றச்சாட்டைத் தவிர்த்து ஒரு ஒற்றுமையான நிலைக்கு வந்து இந்தக் கட்சியை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும்.

எங்களுடைய கட்சியின் யாப்பு ஒரு முறைப்படியான யாப்பு. அந்த யாப்பில் கடந்த காலங்களில் சில திருத்தங்கள் செய்திருந்தாலும் அந்தத் திருத்தங்கள் செய்யப்பட்ட அடிப்படையில் அதற்கான திருத்தப்பட்ட யாப்புக்களும் இருக்கின்றன.

சித்திரைப் புத்தாண்டில் இருந்தாவது தமிழரசுக் கட்சி ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும்: சி.வி.கே வேண்டுகோள் | Illankai Tamil Arasu Kachchi Should Act Unitedly

இவ்வாறு இருந்தும் பல விடயங்கள் அன்றைக்கு முறைப்படியாக நடைபெறவில்லை என்பது எனக்கும் தெரியும். இருந்தும் அவற்றையெல்லாம் பேசாமல் நான் மௌனம் காத்தமைக்கு ஒரே ஒரு காரணம் எப்படியாவது இந்தப் பொதுச் சபைக் கூட்டங்களை முடித்து தேசிய மாநாட்டை நடத்தியே ஆகவேண்டும் என்பதுதான்.

அதுதான் என்னுடைய சிந்தனையாகவும் இருந்தது. அதனால்தான் நான் குறைகளைச் சொல்லவில்லை. கட்சிக்குள் உள்ள குறைபாடுகள் எனக்குத் தெரியும். ஆகவே, என்னைப் பொருத்தவரையில் நாங்கள் எல்லாவற்றையும் மறந்து குறிப்பாக பிரதேசவாதம், தனிப்பட்ட நபர், குற்றச்சாட்டுக்கள், வசைபாடுதல்கள் என சகலதையும் மறந்து முரண்பாடுகள் எதுவும் இல்லாமல் கட்சி என்ற ஒன்றை மையப்படுத்திச் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.

கச்சதீவை விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என டக்ளஸ் நம்பிக்கை

கச்சதீவை விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என டக்ளஸ் நம்பிக்கை

கட்சிகளில் ஏற்பட்டுள்ள பிளவுகள்

இதனூடாக இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு கட்சியை இயங்கு நிலைக்குக் கொண்டு வர வேண்டும். ஏனென்றால் இப்போதைய நிலையில் தெற்கத்தேய சக்திகள் கூட எங்களுடைய பிளவுகளைச் சாதகமாகப் பயன்படுத்தி ஊடுருவக்கூடிய வாய்ப்புகளும் இருக்கின்றன.

ஆகவே, அதையும் புரிந்துகொண்டு செயற்பட வேண்டியது அவசியம். கட்சியின் பாரம்பரிய யாப்பில் சில பிழைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவை அனைத்தையும் புரிந்துகொண்டு தற்போதைய நிலைமையையும் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்.

சித்திரைப் புத்தாண்டில் இருந்தாவது தமிழரசுக் கட்சி ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும்: சி.வி.கே வேண்டுகோள் | Illankai Tamil Arasu Kachchi Should Act Unitedly

குறிப்பாக யாப்பில் சில பிழைகள் இருக்கின்றன. அவற்றை நாங்கள் பேசித் தீர்க்கலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. ஆகவே, நாங்கள் கூடிப் பேசுவோம். இப்போது கட்சியை நீதிமன்றத்திலே வைத்துக் கொண்டு கட்சியை நீதிமன்றம் கட்டுப்படுத்துகின்ற நிலைமை இருக்கின்றது.

ஆகவே, அதிலிருந்து நாங்கள் விடுவித்துக் கொண்டு கட்சியை முன்னோக்கிக் கொண்டு பயணிப்போம். எங்களுடைய கட்சி உறுப்பினர்கள் பேதங்களைத் தவிர்த்து பேதங்களை மறந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கல்முனை வடக்கில் நாளை அனுட்டிக்கப்படவுள்ள கறுப்பு சித்திரை

கல்முனை வடக்கில் நாளை அனுட்டிக்கப்படவுள்ள கறுப்பு சித்திரை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW    


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கட்டுவன், முன்சன், Germany, Toronto, Canada, Peterborough, Canada

07 Dec, 2021
மரண அறிவித்தல்

கருங்காலி சோலை, Bümpliz, Switzerland

21 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை மேற்கு

23 Nov, 2010
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வவுனியா

22 Nov, 1999
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, துணுக்காய்

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Pickering, Canada

03 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US