அநுரவுடன் இணையும் இலங்கை தமிழரசு கட்சி.. அம்பலமான உண்மை!
இலங்கை தமிழரசு கட்சியானது உள்ளூராட்சி சபையில் ஆட்சி அமைப்பதற்கு தேசிய மக்கள் சக்தியிடம் ஆதரவு கோரிய விடயம் அம்பலமாகியுள்ளது.
மானிப்பாய் பிரதேச சபையில் ஆட்சியை அமைப்பதற்காக இவ்வாறு ஆதரவு கோரியமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆட்சியமைப்பு
இலங்கை தமிழரசு கட்சியின் மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினரான ஜெசீதன், மானிப்பாய் பிரதேச சபையின் NPP உறுப்பினர் ஒருவரிடம் இவ்வாறு ஆதரவு கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், கட்சியின் உயர்மட்ட குழுவின் தீர்மானத்துக்கு அமையவே ஆதரவு வழங்குவதா இல்லையா என முடிவு எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர் ஜெசீதனிடம் கூறியதாக அறிய முடிகிறது.
மேலும், இலங்கை தமிழரசு கட்சியானது பதவிக்காக எந்த அளவுக்கும் செல்வதற்கு தயாராகிய விடயம் தற்போது புலப்படுவதாக அரசியல் தரப்புகளில் தெரிவிக்கப்படுகின்றது.

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri
