பலமிழக்கும் தமிழரசுக் கட்சி! தேர்தல் களத்தில் இருந்து வெளியேறிய மற்றுமொரு முக்கியஸ்தர்
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உறுதி செய்யப்பட்டுள்ள வேட்பாளர்..
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வன்னி மாவட்ட களத்தில் வேட்பாளராக மன்னார் தொகுதியில் சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் மாத்திரமே தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இரு வேட்பாளர்கள் தெரிவில் தொடர்ந்து இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. முன்னாள் எம்.பி சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆரம்பத்தில் தேர்தல் களத்திலிருந்து ஒதுங்குவதாக அறிவித்திருந்தார்.
விலகும் சார்ள்ஸ்
எனினும், பின்னர் ஆதரவாளர்களின் வற்புறுத்தல்களினால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்த நிலையில் மீண்டும் நேற்றைய தினம் (8) இந்த தேர்தல் களத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் மன்னாரில் இருந்து மேலும் இரு வேட்பாளர்களை தெரிவு செய்ய மன்னார் தமிழரசுக்கட்சி கிளை தொடர்ந்து பல்வேறு முயற்சிகளிலும் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் பலர் தமிழரசுக் கட்யினால் வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டுள்ள போதும், இதுவரை அவர்கள் தமது விருப்பத்தை தெரிவிக்கவில்லை என தெரிய வருகிறது.
இந்த நிலையில் வன்னித் தேர்தல் தொகுதியில் தமிழரசுக் கட்சியின் முடிவு இன்று இறுதி நிலைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கிளீன் தையிட்டி..! 1 நாள் முன்

சுந்தரி சீரியல் புகழ் நடிகை கேப்ரியல்லா செல்லஸ் வளைகாப்பு புகைப்படங்கள்.. இத்தனை பிரபலங்கள் வந்தார்களா.. Cineulagam

Rasipalan: இன்னும் ஒரு வாரத்தில் அதிர்ஷ்டத்தை கொட்டப்போகும் செவ்வாய் பெயர்ச்சி- உங்க ராசி இருக்கா? Manithan

ட்ரம்பால் எழுந்த பீதி... பல பில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் லண்டனில் இருந்து வெளியேற்றம் News Lankasri

அட்டகாசமாக நடந்த சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் வளைகாப்பு... நேரில் சென்ற நடிகர்கள் Cineulagam
