எரிபொருள் விலை மேலும் குறையும்! அநுர தரப்பு உறுதி
இலங்கையில் உள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் மீள இயங்க இருப்பதால் எதிர்காலத்தில் எரிபொருள் விலை குறைவடையும் என பொறியியலாளரும் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளருமான ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“இலங்கையின் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் இதுவரை காலமும் இயங்காமல் இருந்தன. இதனால் வெளிநாடுகளில் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலை பெற்றுக்கொள்ள அதிகளவு பணம் செலுத்த வேண்டியிருந்தது.
தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் சுத்திகரிப்பு நிலையங்களை மீள இயங்க செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதன் பின்னர், எரிபொருள் விலை கனிசமாக குறைவடையும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam