இலங்கையினதும் இந்தியாவினதும் பாதுகாப்பு பிரிக்க முடியாதது: இந்திய உயர்ஸ்தானிகர்
இலங்கையினதும் இந்தியாவினதும் பாதுகாப்பு பிரிக்க முடியாதது, பரஸ்பரம் ஒன்றிணைந்தது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை எதிர்கொண்ட முன்னொரு போதும் இல்லாத நெருக்கடியின் போது வேகமாக வலுவான விதத்தில் செயற்பட்டபோது இந்தியா வேறு ஒரு நெருக்கடி விடயத்தில் நடந்து கொள்ளவில்லை.
இந்தியாவின் தலைமைத்துவம் இந்தியா இலங்கைக்கு உதவுவதற்காக சர்வதேச அளவிலும உள்நாட்டிலும் தனது பங்களிப்பை வழங்கியது.
இந்தியாவின் தலைமைத்துவம்
வலுவான இந்திய இலங்கை உறவுகள் குறித்து தெளிவாகவும் அர்ப்பணிப்புடனும் உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை சீன கப்பல்கள் கொழும்பிற்கு வருவது குறித்த இந்தியாவின் கரிசனைகள் தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், இந்தியாவும் இலங்கையும் இந்து சமுத்திரத்தில் உள்ளன.
கடற்பயண சுதந்திரத்தை உறுதி செய்வது இரு நாடுகளினதும் கூட்டு பொறுப்பு கடப்பாடு. உருவாகின்ற கடல்சார் சவால்களுக்கு இணைந்து தீர்வை காண வேண்டும்.
கூட்டு பொறுப்பு
பாதுகாப்பும் ஸ்திரதன்மையும் காணப்பட்டால் அமைதியும் வளமும் காணப்படும். எங்கள் நாடுகள் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்வது எங்களின் கூட்டு பொறுப்பாகும்.
இந்த அர்த்தத்தில் இலங்கையினதும் இந்தியாவினதும் பாதுகாப்பு பிரிக்க முடியாதது, பரஸ்பரம் ஒன்றிணைந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
