மல்லாவி பகுதியில் அடையாள அட்டை பரிசோதனை முறைமை தீவிரம்
மல்லாவியில் காவல்துறையினரால் அடையாள அட்டை பரிசோதனை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில்,மல்லாவி நகருக்குள் நுழையும் பொது மக்கள் அனைவரிடமும் மல்லாவி பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் அடையாள அட்டை பரிசோதிக்கப்படுகின்றது.
அரசினால் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ள புதிய நடைமுறையின் படி இன்றைய தினத்தில் பயணிக்க கூடியவர்கள் மட்டும் பொலிஸாரால் தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகின்றார்கள்.
ஏனையோர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றார்கள் தொழில் நிலையங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் கடமை புரிவோர் ,அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் தவிர்ந்த ஏனையோர் அனைவரும் அடையாள அட்டை பரிசோதனையின் பின்னரே அனுமதிக்கப்படுகின்றார்கள்.