பழங்குடியின மக்களுக்கு அடையாள அட்டை வழங்க ஒப்புதல்
காடுகளுக்குள் நுழைய பழங்குடியின மக்களுக்கு அடையாள அட்டை வழங்க வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களம் முடிவு செய்துள்ளது.
பாதுகாக்கப்பட்ட காடுகளுக்குள் நுழையும் போது வன பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு அதிகாரிகளால் துன்புறுத்தப்படுவதாக ரதுகல பழங்குடியின தலைவர் டானிகல மஹாபந்தலகே சுடவன்னில தெரிவித்துள்ளார்.
சட்டப்பூர்வ அடையாள அட்டை
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாடு காரணமாக பழங்குடியின மக்கள் வனப்பகுதிக்குள் நுழைவதற்கு சட்டப்பூர்வ அடையாள அட்டை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக ரதுகல மற்றும் தம்பன பழங்குடியினருக்கான அடையாள அட்டைகள் வழங்கப்படும் எனவும், பழங்குடியின தலைவர்கள் வழங்கும் பட்டியலின் பிரகாரம் அடையாள அட்டைகள் வழங்கப்படும் எனவும் வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri
