புதிய சட்டத்தரணியை தேர்ந்தெடுப்பதில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் சவால்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) தலைமை அரசுத்தரப்பு சட்டத்தரணியாகப் பணியாற்றிய கரீம் கான் கடுமையான நடத்தை விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக, புதிய அரசுத்தரப்பு சட்டத்தரணியை தேர்ந்தெடுப்பதில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
அமெரிக்காவின் இராஜதந்திர அழுத்தம்
மேலும், அமெரிக்காவின் கடுமையான இராஜதந்திர அழுத்தம் மற்றும் உறுப்பு நாடுகள் தொடர்ச்சியாக அமைப்பிலிருந்து வெளியேறி வருவது நீதிமன்றத்திற்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
வெனிசுலா, புர்கினா பாசோ, மாலி மற்றும் நைஜர் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, சாட் நாடு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து முறைப்படி வெளியேறுவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கிய ஐந்தாவது நாடாக மாறியுள்ளது.

இந்த நாடுகள் அனைத்தும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மேல்லை நைஜீரிய அல்லாத நாடுகளுக்கு எதிராக மட்டுமே அதிக கவனம் செலுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளன.
அதேவேளையில், நீதிமன்றத்தின் 125 உறுப்பு நாடுகளில் 82 நாடுகள் வாக்களித்து கரீம் கானைப் பதவியிலிருந்து நீக்கின.
புதிய சட்டத்தரணியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைமுறைகள் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றபோதிலும், வரும் புத்தாண்டுக்கு முன்பாக இதற்கான வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்
காசாவில் போர் குற்றங்கள் புரிந்ததாக இஸ்ரேலிய தலைவர்களுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், அமெரிக்கப் படைகள் தொடர்பான விசாரணைகளை நிறுத்த வேண்டும் என்றும் வொஷிங்டன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மேலும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து நாடுகள் வெளியேற அமெரிக்க அரசு அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

புதிய சட்டத்தரணி தேர்ந்தெடுக்கப்படும் வரை, ஃபிஜி நாட்டைச் சேர்ந்த நஜாத் ஷமீன் கான் மற்றும் செனகல் நாட்டைச் சேர்ந்த மாமே மண்டியாக் நியாங் ஆகிய இரண்டு துணை அரசுத்தரப்பு சட்டத்தரணிகளும் இந்த அலுவலகத்தைத் தற்காலிகமாக நிர்வாகம் செய்வார்கள்.
இத்தகைய பின்னடைவுகளுக்கு மத்தியிலும், "மனிதகுலத்தின் மனசாட்சியைப் உலுக்கும் குற்றங்களுக்கு நீதியை வழங்கி, தவறு செய்தவர்களைப் பொறுப்பேற்கச் செய்வதில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உறுதியுடன் தொடர்ந்து செயல்படும்" என்று நீதிமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது.