ஐசிசி தலைவர் ஜெய் சா துபாய் தலைமையகத்துக்கு விஜயம்
சர்வதேச கிரிக்கெட் சம்மேளன (ICC) தலைவராக நியமிக்கப்பட்டுள்ள, ஜெய் சா இன்று துபாயில் உள்ள சம்மேளனத்தின் தலைமையகத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு சம்மேளனத்தின் இயக்குநர்கள் மற்றும் பணியாளர்களை அவர் சந்தித்துள்ளார்.
இந்த விஜயம், சம்மேளனத்தில் உள்ள தமது சகாக்களுடன் இணைவதற்கு விலைமதிப்பற்ற வாய்ப்பை வழங்கியது என்று அவர் இந்த விஜயத்தின் பின்னர் குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட் சம்மேளனம்
இதன்போது, எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான ஆரம்ப வரைபடத்தையும் உத்திகளையும் இயக்குநர்களுடன் விவாதித்ததாக ஜெய் சா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், கிரிக்கெட் விளையாட்டின் இலட்சிய பார்வைக்காக, புதிய தலைவரை, துணைத் தலைவர் இம்ரான் குவாஜா பாராட்டியுள்ளார்.
அவரது பதவிக்காலத்தில், இயக்குநர்களின் உற்சாகத்தைப் பகிர்ந்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, 2020ஆம் ஆண்டு முதல் ஐசிசி என்ற சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவர் பதவியை வகித்த கிரெக் பார்க்லேக்குப் பின்னர் ஜெய் சா தலைவராக பதவியேற்றுள்ளார். இதற்கு முன்னர், அவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளராக பதவி வகித்து வந்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri