ஐசிசி தலைவர் ஜெய் சா துபாய் தலைமையகத்துக்கு விஜயம்
சர்வதேச கிரிக்கெட் சம்மேளன (ICC) தலைவராக நியமிக்கப்பட்டுள்ள, ஜெய் சா இன்று துபாயில் உள்ள சம்மேளனத்தின் தலைமையகத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு சம்மேளனத்தின் இயக்குநர்கள் மற்றும் பணியாளர்களை அவர் சந்தித்துள்ளார்.
இந்த விஜயம், சம்மேளனத்தில் உள்ள தமது சகாக்களுடன் இணைவதற்கு விலைமதிப்பற்ற வாய்ப்பை வழங்கியது என்று அவர் இந்த விஜயத்தின் பின்னர் குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட் சம்மேளனம்
இதன்போது, எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான ஆரம்ப வரைபடத்தையும் உத்திகளையும் இயக்குநர்களுடன் விவாதித்ததாக ஜெய் சா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், கிரிக்கெட் விளையாட்டின் இலட்சிய பார்வைக்காக, புதிய தலைவரை, துணைத் தலைவர் இம்ரான் குவாஜா பாராட்டியுள்ளார்.
அவரது பதவிக்காலத்தில், இயக்குநர்களின் உற்சாகத்தைப் பகிர்ந்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, 2020ஆம் ஆண்டு முதல் ஐசிசி என்ற சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவர் பதவியை வகித்த கிரெக் பார்க்லேக்குப் பின்னர் ஜெய் சா தலைவராக பதவியேற்றுள்ளார். இதற்கு முன்னர், அவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளராக பதவி வகித்து வந்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam