பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்கவுள்ள விமல் வீரவன்ச
பத்தரமுல்ல போர் வீரர்கள் நினைவுத்தூபிக்கு அருகில் அண்மையில் இடம்பெற்ற பதற்றமான சம்பவத்துடன் தொடர்புடைய வாக்குமூலத்தை வழங்குவதற்காக, தமக்கு பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
போர் வீரர்கள் நினைவுத்தூபி
பொலிஸாரின் இந்த அழைப்பின்படி, இன்று(24) திங்கட்கிழமை தாம் தலங்கம பொலிஸ் நிலையத்துக்குச் சென்று வாக்குமூலம் அளிக்கவுள்ளதாகவும் விமல் வீரவன்ச உறுதிப்படுத்தினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நாட்டின் சுயாதீனமான அனைத்துக் குடிமக்களுக்கும் உள்ள அடிப்படை உரிமையின் அடிப்படையில், தாய்நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த போர் வீரர்கள் நினைவுத்தூபிக்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தவே நாம் அங்கு சென்றோம்.
ஆனால், அந்த உன்னதமான செயலுக்கு அநாவசியமாகத் தடையை ஏற்படுத்திய பாதுகாப்புத் தரப்பினர், இப்போது எங்களை குற்றவாளிகளைப் போல் வாக்குமூலம் அளிக்க பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு கட்டளையிட்டு அறிவித்தல் விடுத்துள்ளனர்.
சட்டம் அனைவருக்கும் சமம்
நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமானது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேடைகளில் கூறுகின்றார். ஆனால், நடைமுறையில் அது அவ்வாறு ஒருபோதும் செயற்படவில்லை.

நீதி அமைச்சுக்குச் சொந்தமானதாக அறிவிக்கப்பட்டுள்ள மல்வானை மாளிகையைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்தவர்களுக்கு எதிராக தற்போதைய அரசோ அல்லது பொலிஸாரோ இதுவரை எந்தவொரு சட்டப் படியிலான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
நாம் ஒரு பொது இடத்துக்கே அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்றோம். ஆனால் எமக்கு எதிராக ஒரு விதமான சட்டம் பாய்கின்றது. அதேவேளை, அரசின் சொத்தான மாளிகையை ஆக்கிரமித்தவர்களுக்கு எதிராகச் சட்டம் முற்றாக மௌனமாக இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
முத்து தலையில் இடியை இறக்கிய சிந்தாமணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான் Cineulagam
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan