குடும்பச் சண்டையால் மனைவியை சுட்டுப் படுகொலைசெய்த கணவன்!
இரத்தினபுரி மாவட்டம், எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரதமண்டிய பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது மனைவியைத் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது பெண்ணே மரணமடைந்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டுக்குள்ளான பெண் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்படட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குடும்பச் சண்டையே இந்தக் கொலைச் சம்பவத்துக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனைக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய நபரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 11 நிமிடங்கள் முன்

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
