மனைவியை தீவைத்து கொளுத்தி பரபரப்பை ஏற்படுத்திய கணவன் - பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலம்

Colombo Supreme Court of Sri Lanka Sri Lanka Police Investigation
By Dhayani May 24, 2026 09:32 AM GMT
Report

கொழும்பு - அங்கொடை, மீகவத்தை பகுதியில் தன் மனைவியின் மீது பெட்ரோல் ஊற்றித்தீ வைத்த சம்பவம் தொடர்பாக கணவரான சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் கொழும்பு - அங்கொடை, மீகவத்தை பகுதியில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் சந்தேகநபர் நேற்று ( 22) முல்லேரியாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவசரமாக கூடும் இலங்கை மத்திய வங்கியின் நாணயக்கொள்கை சபை - வெளியாகவுள்ள முக்கிய தீர்மானம்

அவசரமாக கூடும் இலங்கை மத்திய வங்கியின் நாணயக்கொள்கை சபை - வெளியாகவுள்ள முக்கிய தீர்மானம்

பெண் கவலைக்கிடம்

கடந்த 18ஆம் திகதி மாலை சுமார் 5.30 மணியளவில் முச்சக்கர வண்டியில் வந்த அவர், மனைவியின் தலையில் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

மனைவியை தீவைத்து கொளுத்தி பரபரப்பை ஏற்படுத்திய கணவன் - பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலம் | Husband Who Poured Petrol On His Wife And Fire

இதன் காரணமாக படுகாயமடைந்த அப்பெண், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது முகம் மற்றும் மார்பில் ஏற்பட்ட கடுமையான தீக்காயங்கள் காரணமாக அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும், அவரிடமிருந்து ஏற்கனவே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலம்

இச்சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில், அப்பெண்ணின் சட்டப்பூர்வ கணவரே இந்த தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

இதன்போது சந்தேகநபர் தனது மனைவிக்குத் தீ வைத்ததாக ஒப்புக்கொண்டுள்ளதாகவும், முந்தைய திருமணத்திலிருந்து சட்டப்பூர்வமாகப் பிரிந்த பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அந்த பெண் பலருடன் தொடர்பில் இருப்பதாகவும், பல நாட்களாக வீட்டிற்கு திரும்புவதில்லை என்றும், வழங்கிய அனைத்து அறிவுரைகளையும் மீறி, தொடர்ந்து பலருடன் உறவில் ஈடுபட்டு வந்ததாகவும் சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

மனைவியை தீவைத்து கொளுத்தி பரபரப்பை ஏற்படுத்திய கணவன் - பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலம் | Husband Who Poured Petrol On His Wife And Fire

சந்தேகநபர் மனைவிக்கு தீ வைத்த பிறகு தானும் தற்கொலை செய்துகொள்வதாக அவரிடம் கூறியதாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் மீகவத்தை, அங்கொடையை சேர்ந்த 41 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி என்றும், அவர் மீது இதற்கு முன்பு எந்த குற்றமும் பதிவாகவில்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, சந்தேகநபரிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் படி, சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட பெட்ரோல் போத்தல் மற்றும் ஒரு முச்சக்கர வண்டியும் பொலிஸாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதற்கமைய, சந்தேகநபர் இன்று (24) அளுத்கடை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை! பணம் மற்றும் தங்க நகைகள் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்

இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை! பணம் மற்றும் தங்க நகைகள் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்

இலங்கையில் வங்கிகளில் கடன் பெற்றவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் வங்கிகளில் கடன் பெற்றவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US