மனைவியை தீவைத்து கொளுத்தி பரபரப்பை ஏற்படுத்திய கணவன் - பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலம்
கொழும்பு - அங்கொடை, மீகவத்தை பகுதியில் தன் மனைவியின் மீது பெட்ரோல் ஊற்றித்தீ வைத்த சம்பவம் தொடர்பாக கணவரான சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் கொழும்பு - அங்கொடை, மீகவத்தை பகுதியில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் சந்தேகநபர் நேற்று ( 22) முல்லேரியாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் கவலைக்கிடம்
கடந்த 18ஆம் திகதி மாலை சுமார் 5.30 மணியளவில் முச்சக்கர வண்டியில் வந்த அவர், மனைவியின் தலையில் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

இதன் காரணமாக படுகாயமடைந்த அப்பெண், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது முகம் மற்றும் மார்பில் ஏற்பட்ட கடுமையான தீக்காயங்கள் காரணமாக அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும், அவரிடமிருந்து ஏற்கனவே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலம்
இச்சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில், அப்பெண்ணின் சட்டப்பூர்வ கணவரே இந்த தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
இதன்போது சந்தேகநபர் தனது மனைவிக்குத் தீ வைத்ததாக ஒப்புக்கொண்டுள்ளதாகவும், முந்தைய திருமணத்திலிருந்து சட்டப்பூர்வமாகப் பிரிந்த பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அந்த பெண் பலருடன் தொடர்பில் இருப்பதாகவும், பல நாட்களாக வீட்டிற்கு திரும்புவதில்லை என்றும், வழங்கிய அனைத்து அறிவுரைகளையும் மீறி, தொடர்ந்து பலருடன் உறவில் ஈடுபட்டு வந்ததாகவும் சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சந்தேகநபர் மனைவிக்கு தீ வைத்த பிறகு தானும் தற்கொலை செய்துகொள்வதாக அவரிடம் கூறியதாகவும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் மீகவத்தை, அங்கொடையை சேர்ந்த 41 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி என்றும், அவர் மீது இதற்கு முன்பு எந்த குற்றமும் பதிவாகவில்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, சந்தேகநபரிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் படி, சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட பெட்ரோல் போத்தல் மற்றும் ஒரு முச்சக்கர வண்டியும் பொலிஸாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதற்கமைய, சந்தேகநபர் இன்று (24) அளுத்கடை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
3 மற்றும் 5 வயது குழந்தையை காட்டில் கைவிட்ட பிரான்ஸ் பெற்றோர்: போர்ச்சுகல் பொலிஸார் அதிரடி News Lankasri