மனைவியை மீட்டுத் தாருங்கள்! கணவர் முறைப்பாடு - செய்திகளின் தொகுப்பு
சவுதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்ற நிலையில் அங்கு பல்வேறு துன்புறுத்தல்களை அனுபவிக்கும் தனது மனைவியை மீட்டுத்தருமாறு கோரி இளம் கணவர், யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கொன்சீயூலர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கிளிநொச்சி - சாந்தபுரம் என்ற முகவரியைச் சேர்ந்த வடிவேல் லிங்கேஸ்வரன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு தனது மனைவியை மீட்டுத் தருமாறு முறைப்பாடு செய்துள்ளார்.
திருமணம் செய்து ஒன்றரை வருடங்கள் கடந்த நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக முகவர் ஒருவர் மூலம் மனைவி சவுதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான காலைநேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,